Ads (728x90)

மேல் மாகாணத்தில் தனியார் பேருந்து பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

இன்று முதல் செல்லுபடியாகும் பயணச்சீட்டு இல்லாமல் தனியார் பேருந்துகளிலும் பயணிக்கும் பயணிகளுக்கும், பயணச்சீட்டு வழங்கத் தவறும் நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும்.

இதன்படி இன்று முதல் மேல் மாகாணத்திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் தங்கள் பயணச் சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை வலியுறுத்தியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget