பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டில் இருந்து இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார்.
புது டில்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மஹிசினி கொலொன்னே உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர்.
இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் தனது விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.


Post a Comment