Ads (728x90)

ரு முறையாவது உண்மையாகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தவன், எதற்காகவும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கீழ்நோக்கி ஓடுவதே தண்ணீரின் இயற்கை. ஆனால் சூரியனின் கதிர்கள் அதனை ஆவியாக்கி வானில் உயர்த்துகின்றன. அதுபோல மனமும் உலக சுகங்களை நாடிப் போவது இயற்கைதான். இறையருள் அதனை உயர்ந்த பொருளை நாடிச் செல்லுமாறு தூக்கி விடுகிறது.

–சாரதாதேவி. 


லகம் நமக்கு எப்படித் தோன்றுகிறது என்பது, நமது மனப்பான்மையைப் பொறுத்தது. நமது எண்ணங்களே பொருட்களை அழகானவை ஆக்குகின்றன. அவற்றை விகாரமானதாக ஆக்குவதும் நம் எண்ணங்களே. உலகம் முழுவதும் நம் மனதில்தான் இருக்கிறது. எதையும் சரியான முறையில் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். முதலில் இந்த உலகை நம்புங்கள். உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும் அர்த்தம் உள்ளது.

                                                            –விவேகானந்தர்.
காலம் கொடியது. துன்பத்தால் வாடி வருந்தும் மனிதனிடம் கூட அது கருணை காட்டுவதில்லை. வாழ்க்கையை இன்பம் அனுபவிப்பதற்குரிய இடம் என்று மூடர்கள் நினைக் கிறார்கள். ஆனால் உண்மையில் அது பலவித வேதனைகளின் உறைவிடமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விழுங்கி கபளீகரம் செய்யும் காலத்திற்கு இறையாகாமல் தப்பக் கூடியதாக இந்த உலகில் ஒரு பொருளும் இல்லை.

–ஸ்ரீராமர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget