Ads (728x90)

இலங்­கைக்கு கிரிக்கெட் சுற்­றுலா மேற்­கொண்­டுள்ள இந்­திய கிரிக்கெட் அணி இலங்கை அணி­யுடன்  3 டெஸ்ட், 5 சர்­வ­தேச ஒருநாள் போட்­டிகள் மற்றும் ஒரே­யொரு இரு­ப­துக்கு 20 என முழு­மை­யான தொடரில் பங்­கு­கொள்­ள­வுள்­ளது. இதன் முத­லா­வது தொட­ரான டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி எதிர்­வரும் 26 ஆம் திகதி காலி சர்­வ­தேச மைதா­னத்தில் ஆரம்­ப­மாகும்.
இலங்கை அணி தனது ‍சொந்த மண்ணில் விளை­யா­டு­கின்­ற­போ­திலும், டெஸ்ட் தர­வ­ரி­சையில் முத­லி­டத்­தி­லுள்ள இந்­திய அணியை வெற்றிக் கொள்­வ­தென்­பது சவா­லா­ன­தாகும். இலங்கை ஆடு­க­ளங்கள் அதி­க­மாக சுழற்­பந்­து­வீச்­சுக்கு சாத­கத்­தன்­மையைக் கொண்­டதால், இரு அணி­க­ளிலும் சுழற்­பந்­து­வீச்­சா­ளர்­களை ஈடு­ப­டுத்த அதிக வாய்ப்பு உண்டு. இந்த தொடரில் டெஸ்ட் தர­வ­ரி­சையின் முதல் மூன்று இடங்­க­ளி­லுள்ள ரவீந்­திர ஜடேஜா, ரங்­கன ஹேரத் மற்றும் ரவிச்­சந்­திரன் அஷ்வின் ஆகிய மூவரும் பங்­கு­கொள்­கின்­றமை விசேட அம்­ச­மாகும்.
இலங்‍கை கிரிக்கெட் அணியில் புதிய டெஸ்ட் அணித்­த­லை­வ­ராக அண்­மையில் நடை­பெற்று முடிந்த ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான ‍டெஸ்ட் போட்­டியில் தினேஷ் சந்­திமால் நிய­மிக்­கப்­பட்டார். அவர் தலை­மை­யேற்ற முத­லா­வது  போட்­டியில் வெற்­றியும் பெற்­றி­ருந்தார். எனினும் தற்­போது  வைரஸ் காய்ச்சல் பிடித்­துள்­ளதால் முதல் டெஸ்ட் போட்­டியில் பங்­கேற்க மாட்டார்.   இதனால் ரங்­கன ஹேரத் அணித்­த­லை­வ­ராக செயற்­ப­டுவார்.
இரு அணி­க­ளிலும் இளம் மற்றும் அனு­பவ வீரர்கள் என  கல­வை­யாக காணப்­ப­டு­கின்­றனர். எனினும், இலங்கை அணியை விட இந்­திய அணி சற்று முன்­னேற்­ற­க­ர­மா­ன­தா­கவே விளங்­கு­கி­றது. துடுப்­பாட்டம், பந்­து­வீச்சு மற்றும் களத்­த­டுப்பு என அனைத்­திலும் இந்­தியா முன்­னி­லையில் இருக்­கின்­றது.
இந்­திய அணியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா, அஜிங்­கியா ரஹானே, சேத்­தேஷ்வர் புஜாரா , விராட் கோஹ்லி , லோகேஷ் ராஹுல் என பலம்­பொ­ருந்­திய துடுப்­பாட்ட வரி‍சை காணப்­ப­டு­கி­றது. வேகப்­பந்­து­வீச்சில் இஷாந்த்  ஷர்மா, மொஹமட் சமி, உமேஷ் யாதவ்  ஆகிய மூவர் இந்­திய குழாத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு இரு­பது  போட்­டி­களில் இந்­திய அணிக்கு வெற்­றியை ஈட்­டி­கொ­டுத்து வரு­கின்ற சக­ல­துறை வீர­ரான ஹர்திக் பாண்­டியா சேர்க்­கப்­பட்­டுள்­ளமை அவரின் மீது பலத்த எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும் தமி­ழக வீரர்­க­ளான முரளி விஜய் மற்றும் அபினவ் முகுந்த் ஆகியோர் நீண்ட இடை­வெ­ளிக்குப் பின்னர் இணைந்­துள்­ளனர். 
இலங்கை அணியை எடுத்­துக்­கொண்டால், உபுல் தரங்க, திமுத் கரு­ணா­ரத்ன, குசல் மெண்டிஸ், எஞ்­சலோ மெத்­தியூஸ், தினேஷ் சந்­திமால் ( விளை­யாடும் பட்­சத்தில்) ஆகியோர் சிறந்து விளங்­குவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.  அத்­துடன்  அண்­மைக்­கா­ல­மாக சிறந்த ஆற்றல் வெளிப்­பா­டு­களை வெளிக்­கொண்­டு­வரும் தனுஷ்க குண­தி­லக்க , நிரோஷன் திக்­வெல்ல ஆகியோர் துடுப்­பாட்­டத்­திற்கு பலம் சேர்ப்பர். சகல துறை வீர­ரான அசேல குண­ரத்ன காயத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளதால் இலங்கை அணி முக்­கி­ய­மான கட்­டத்தில் அவரை இழந்­துள்­ளது. சுழற்­பந்­து­வீச்சில் ரங்­கன ஹேரத்­துக்கு பக்­க­ப­ல­மாக தில்­ருவன் பெரேரா விளங்­குவார் என்­பதில் சந்­தே­க­மில்லை. டெஸ்ட் அரங்கில் 376 விக்­கெட்­டு­களை வீழ்த்­தி­யுள்ள ரங்­கன ஹேரத் இத்­தொ­டரில் 400 விக்­கெட்­டுகள் என்ற மைல் கல்லை எட்­டுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. வேகப்­பந்­து­வீச்சில் சுரங்க லக்மால், நுவன் பிரதீப், லஹிரு குமார, விமுக்தி பெர்­னாண்டோ காணப்­ப­டு­கின்­றனர்.
இதேவேளை இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸ் இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளமை இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பலமாகும். அவரின் திறமை மற்றும் அனுபவம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிறந்த பயனை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 
இவ்­விரு அணி­களும் இது­வரை 38 டெஸ்ட் போட்­டி­களில் சந்­தித்து 16 போட்­டி­களில் இந்­தி­யாவும் , 7 போட்­டி­களில் இலங்­கையும் வெற்­றி­யீட்­டி­யுள்­ளன. 15 போட்­டிகள் வெற்றி தோல்­வி­யின்றி முடி­வ­டைந்­துள்­ளன. சர்­வ­தேச ஒருநாள் அரங்கில் 150 போட்­டி­களில் விளையாடி 83 போட்டிகளில் இந்தியாவும், 55 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன் 11 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை, ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இந்தியா 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன்  இலங்கை 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget