Ads (728x90)

யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் பயணித்தவேளை நடத்தப்பட்ட துப்­பாக்கிச் சூட்டு சம்­பவத்­தினை விசா­ரணை செய்ய தனி பொலிஸ் பிரி­வினை நிய­மிக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலிஸ்மா அதி­ப­ருக்கு பணிப்­புரை விடுத்­துள்ளார். அதே­நேரம் எதிர்­கா­லத்தில் நீதி­ப­தி­களின் பாது­காப்பு தொடர்­பி­லான விசேட செயற்­திட்டம் ஒன்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.
யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் பயணித்தபோது நடத்தப்பட்ட துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவம் தொடர் பில் விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் பய­ணித்த போது நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச்­சூட்டு சம்­பவத்தை வன்­மை­யாக கண்­டிக்கும் அதே­நேரம் இதன் போது உயி­ரி­ழந்த பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேம­ச்சந்தி­ர­விற்கு அனு­தா­பங்­க­ளையும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார்.
இந்தச் சம்­ப­வத்தின் பின்னர் நீதி­ப­திகள் பாது­காப்பு குறித்து அதிக அவ­தானம் செலுத்தும் விசேட செயற்­திட்டம் ஒன்­றினை முன்­னெ­டுக்­கவும் பணித்­துள்ளார்.
மேற்­படி சம்­பவம் தொடர்­பிலும் விசா­ரணை நடத்­து­வ­தற்கு விசேட பொலிஸ் குழு­வொன்­றினை நிய­மிக்­கு­மாறு பொலிஸ்மா அதி­ப­ருக்கு ஜனா­தி­பதி பணிப்­புரை விடுத்­துள்ளார்.
விபத்தில் உயி­ரி­ழந்த பொலிஸ் சார்­ஜன்ட்டின் குடும்­பத்­திற்கு அனு­தாபம் தெரி­வித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறான நேர்மையான அதி காரிகள் பொலிஸ் திணைக்களத்திற்கு எடுத்துகாட்டானவர்கள் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget