Ads (728x90)

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னான சந்­திப்பு நடை­பெ­றும் வரை­யில், வடக்கு மாகாண சபை­யில் முரண்­பாடு ஏற்­ப­டக் கூடிய விட­யங்­களை பிற்­போ­டு­வது என்று நேற்­றுத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள் ளது.
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக் கும் இடை­யே­யான சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது.
இந்­தச் சந்­திப்­பிலேயே மேற்­படி முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அனுப்பி வைத்­துள்ள பத்­தி­ரி­கைச் செய்­திக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.
‘மற்­றைய விட­யங்­க­ளு­டன் வடக்கு மாகாண சபை­யின் தற்­போ­தைய நில­மை­யும் பரி­சீ­லிக்­கப்­பட்­டது. அங்கு எழுந்­துள்ள நிலமை பற்றி முடி­வு­களை எடுக்க முன்­ப­தாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் எல்லா கட்­சித் தலை­வர்­க­ளு­ட­னும் பேச வேண்­டும் என்ற கருத்­தின் அடிப்­ப­டை­யில் எல்­லாக் கட்­சித் தலை­வர்­க­ளை­யும் சந்­திப்­பது என்று முடிவு எடுக்­கப்­பட்­டது.
அது வரை­யில் வடக்கு மாகாண சபை­யில் முன்­மொ­ழி­யப்­பட்ட பிரே­ர­ணை­கள் உட்­பட சபை­யில் எழும் ஏனைய முரண்­பாட்­டுக்­க­மை­வ­தான கரு­மங்­கள் பிற்­போ­டப்­ப­டு­வது அவ­சி­யம் என்­றும் இணக்­கம் காணப்­பட்­டது’ என்­றுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget