யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேமச்சந்திரவின் குடும்பத்துக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகப்பூர்வ கீச்சகப் பக்கத்தில் இதனைப் பதிவேற்றியுள்ளார்.
“பணியிலிருக்கும் போது உப பொலிஸ் பரிசோதகர் உயிரிழந்துள்ளமை கவலைக்குரிய விடயமே. இந்த நேரத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Post a Comment