Ads (728x90)

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களால் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டத்தின் 150 நாளை முன்னிட்டு கவனவீர்ப்புப் பேரணியும், ஆலய வழிபாடும் இன்று இடம்பெற்றன.
உறவினர்கள் காலை 11 மணி முதல் 12 மணி வரை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்து மணிக்கூட்டு கோபுர சந்தியூடாக வவுனியா முதன்மை தபாலகத்தை அண்மித்த பகுதியில் அமைதியான முறையில் போரட்டத்தை முன்னெடுத்தனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget