Ads (728x90)

உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் பிள்­ளை­களை அணைத்து, பொலிஸ் அதி­கா­ரி­யின் பூத­வு­டல் முன்­பாக நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் அழு­துள்­ளார்.
துப்­பாக்­கிச் சூட்­டில் உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் பூத­வு­டல் நேற்று மதி­யம், யாழ்ப்­பா­ணம் தலை­மைப் பொலிஸ் நிலை­யத்­தில் வைக்­கப்­பட்டு அஞ்­சலி செலுத்­தப்­பட்ட பின்­னர் அவ­ரது சொந்த ஊருக்கு எடுத்­துச் செல்­லப்­பட்­டது. பொலிஸ் வாக­னத் தொட­ர­ணி­யாக அவ­ரது பூத­வு­டல் கொண்டு செல்­லப்­பட்­டது.
இந்­தத் தொட­ர­ணி­யு­டன் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மற்­றும் மாவட்ட நீதி­ப­தி­க­ளும் சென்­றி­ருந்­த­னர். யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்ற உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் சென்­ற­னர். சிலா­பத்தை நேற்று முன்­னி­ரவு சென்­ற­டைந்­த­னர்.
அங்கு உற­வி­னர்­க­ளி­டம் பூத­வு­டல் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. உயி­ரி­ழந்த பொலி­ஸா­ரின் காலில் தொட்டு வணங்­கி­னார் நீதி­பதி இளஞ்­செ­ழி­யன். இதன் பின்­னர் உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் பிள்­ளை­கள் இரு­வ­ரை­யும் தனித் தனியே அணைத்து, கதறி அழு­தார். இந்­தச் சம்­ப­வம் பார்ப்­ப­வர்­க­ளை­யும் கண் கலங்க வைத்­தது.
இதன் பின்­னர், நீதி­ப­தி­கள் குழு­வி­னர் வடக்கு நோக்­கிப் புறப்­பட்­ட­னர். உயி­ரி­ழந்த பொலிஸ் அதி­கா­ரி­யின் இறு­திக் கிரியை நாளை மறு­தி­னம் புதன் கிழமை பெரும்­பா­லும் இடம்­பெ­றக் கூடும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget