Ads (728x90)

“நல்­லூ­ரில் நீதி­பதி மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் தொடர்­பில் அரசு ஆழமாக சிந்­தித்­துச் செயற்­ப­ட­வேண்­டும்.
விடு­த­லைப் புலி­கள் அமைப்பு உரு­வா­கும் காலப்­ப­கு­தி­யில் இவ்­வா­றான சம்­ப­வங்­களே வடக்­கில் இடம்­பெற்­றன” இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.
அம்­பாந்­தோட்டை, வீர­கெட்­டிய பகு­தி­யில் நடை­பெற்ற நிகழ்­வொன்­றின் பின்­னர், நல்­லூர் துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வம் குறித்து செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
“யாழ்­பா­ணத்­தில் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­கள் இரு­வர் மீது நடத்­தப்­பட்­டுள்ள துப்­பாக்­கிச் சூட்­டில் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார். மற்­றை­ய­வர் படு­கா­ய­ம­டைந்­துள்­ளார். 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் நீதி­ப­தி­யொ­ரு­வ­ருக்கு பாது­காப்பு வழங்­கி­வந்த அதி­கா­ரியே உயி­ரி­ழந்­துள்­ளார்.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னு­டன் பேசி விட­யங்­களை அறிந்­தேன். ‘என்னை இலக்­கு­வைத்து பாய்ந்த துப்­பாக்­கித் தோட்­டா­வையே அந்த அதி­காரி தனது மார்­பில் தாங்கி எனது உயி­ரைக் காத்­தார்’ என நீதி­பதி கூறி­னார். இது வீரச் செய­லா­கும். அந்த அதி­கா­ரிக்கு சண்­மா­னம் வழங்­கப்­ப­ட­வேண்­டும்.
இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் வேறு­கோ­ணத்­தில் கதை­கூ­று­கின்­ற­னர். நீதி­ப­தி­யும், சம்­ப­வத்­தில் காய­ம­டைந்த பொலி­ஸா­ரும் ஒரு விதத்­தி­லும், பொலி­ஸார் மற்­று­மொரு கோணத்­தி­லுமே கருத்து வெளி­யிட்­டுள்­ள­னர்.
எது எப்­ப­டியோ நீதி­பதி சொல்­வதை நாம் ஏற்­க­வேண்­டும். ஆகவே, இது பற்றி உட­ன­டி­யாக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டும்.
பொலி­ஸார் மீது துப்­பாக்­கிச்­சூடு நடத்தி கொலை செய்­யும் அள­வுக்கு நாட்­டின் சட்­ட­மும், ஆட்­சி­யும் பல­வீ­ன­ம­டைந்­துள்­ளது.
இது பார­தூ­ர­மான விட­ய­மா­கும். இவ்­வா­ன­தொரு சம்­ப­வம் அண்­மை­யில் கொழும்­பி­லும் நடை­பெற்­றது. இதில் இரண்டு அதி­கா­ரி­கள் உயி­ரி­ழந்­த­னர். சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளும் உயி­ரி­ழந்­த­னர்.
தற்­போது யாழ்ப்­பா­ணத்­தி­லும் இடம்­பெற்­றுள்­ளது. எனி­னும், யாழ்­பா­ணத்­தில் இப்­ப­டி­யான சம்­ப­வம் இடம்­பெ­றும்­போது சற்று விழிப்­பாக இருக்­க­வேண்­டும். கொழும்­பில் நடை­பெற்­றால் பாதாள உல­கக் குழு­வி­னர் செய்­தி­ருக்­க­லாம் எனக் கூற முடி­யும். ஆனால், அதற்­கும் மேலான சம்­ப­வங்­களே யாழ்ப்­பா­ணத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.
விடு­த­லைப் புலி­கள் உரு­வா­கும் காலப்­ப­கு­தி­யில் இவ்­வா­றான சம்­ப­வங்­களே இடம்­பெற்­றன. எனவே, இது பற்றி அரசு ஆழ­மாக சிந்­தித்து செயற்­ப­ட­வேண்­டும்” என்று மகிந்த ராஜ­பக்ச மேலும் தெரி­வித்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget