Ads (728x90)

யாழ்ப்­பா­ணம் புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யா­வின் படு­கொ­லைச் சம்­ப­வம் போன்ற போதைப்­பொ­ருள்­கள் மற்­றும் போதைப்­பொ­ருள் கடத்­த­லு­டன் இணைந்த நிகழ்­வு­கள் துயர்­மிக்­கவை. இவ்­வாறு தெரி­வித்­தார் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பாணந்­துறை நகர சபை விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்ற ‘போதைப்­பொ­ருட்­க­ளற்ற நாடு’ தேசிய செயற் திட்­டத்­தின் களுத்­துறை மாவட்ட நிகழ்­வில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் தெரி­வித்­தா­வது-;
இவ்­வா­றான அச்­சம் மிகுந்த – போதைப்­பொ­ருள்­க­ளு­டன் தொடர்­பான பல குற்­றச்செ­யல்­கள் கடந்த காலங்­க­ளில் நாட்­டில் நடந்­துள்­ளன. அவ்­வா­றான அசா­தார நிகழ்­வு­க­ ளுக்கு இனி இட­ம­ளிக்க முடி­யாது. போதைப்­பொ­ருள் கண்­டு­பி­டிப்பு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளைப் பாராட்­டு­வ­தற்­கும், ஊக்­கப்­ப­டுத்­து­வ­தற்­கும், அவர்­க­ளுக்­கான சம்­பள அதி­க­ரிப்பு உள்­ளிட்ட வரப் பிர­சா­தங்­களை வழங்­க­வும், பதவி ஏற்­றத்­தின்­போது விதந்­து­ரை­களை வழங்­க­வும் பொருத்­த­மான திட்­டம் எதிர்­கா­லத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும்.

போதைப்­பொ­ருள்­க­ளற்ற நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக அர­சால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் தேசிய செயற் திட்­டத்தை மேலும் பலப்­ப­டுத்­தும் வகை­யில் மேல­திக செயற்­பா­டு­கள் பல எதிர்­வ­ரும் சில மாதங்­க­ளில் ஆரம்­பிக்­கப்­ப­டும். போதைப்­பொ­ருள்­கள் தொடர்­பாக சமூ­கத்­தில் காணப்­ப­டும் கசப்­பான அனு­ப­வங்­களை எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு வழங்­கக் கூடாது.

நாட்­டை­யும், சமூ­கத்­தை­யும் போதைப்­பொ­ரு­ளின் பிடி­யி­லி­ருந்து விடு­விப்­ப­ தற்கு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகை­யில் சகல நட­வ­டிக்­கை­க­ளும் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.- என்­றார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் எண்­ணக்­க­ரு­வின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் ‘போதைப் பொருட்­க­ளற்ற நாடு’ செயற் திட்­டத்­து ­டன் இணைந்­த­தாக நடை­பெ­றும் மாவட்ட மீளாய்வு செயற்­திட்­டத் தொட­ரின் ஒன்­ப­தா­வது நிகழ்வே பாணந்­துறை நகர சபை விளை­யாட்­ட­ ரங்­கில் நேற்று நடை­பெற்­றது.

முன்­ன­தாக கம்­பஹா, காலி, கேகாலை, கொழும்பு, குரு­நா­கல், நுவ­ரெ­லியா, புத்­த­ளம் மற்­றும் யாழ்ப்­பா­ணம் ஆகிய 8 மாகா­ணங்­க­ளில் இந்த நிகழ்வு இடம்­பெற்­றுள்­ளது. நிகழ்­வில் புகை­யிலை நிறு­வ­னங் க­ளின் செயற்­பா­டு­களை அவ­தா­னிப்­ப­தற்­கும், ஆய்வு செய்­வ­தற்­கும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நிறு­வப்­பட் டுள்ள புகை­யிலை ஆய்வு நிலை­யத்­தின் இணை­யத்­த­ள­மும் அரச தலை­வ­ரால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

அமைச்­சர் மஹிந்த சம­ர­சிங்க, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மலித் ஜய­தி­லக்க, மேல் மாகாண அமைச்­சர் காமினி திலக்­க­சிறி உள்­ளிட்ட மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும், களுத்­துறை மாவட்ட அரச அதி­பர் உள்­ளிட்ட அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், பொலிஸ்மா அதி­பர் உள்­ளிட்ட பாது­காப்­புப்  பிரி­வின் பிர­ தா­னி­க­ளும் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget