Ads (728x90)

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா படு­கொலை வழக்கை விசா­ரணை நடத்­தும் தீர்ப்­பா­யம் முன்­னி­லை­யில் சாட்­சி­ய­   ம­ளிக்க ஊர்­கா­வற்­றுறை நீதி­வா­னுக்கு நேற்று அழைப்­பாணை விடுக்­கப்­பட்­டது. 

எதிர்­வ­ரும் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பி.ப. 2 மணிக்கு அவ­ரது சாட்­சி­யப் பதிவு இடம்­பெ­றும் என்று தீர்ப்­பா­யம் அறி­வித்­தது.
புங்­கு­டு­தீவு மாணவி சிவ­லோ­க­நா­தன் வித்­தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்­பு­ணர்­வின் பின் கோர­மா­கக் கொலை செய்­யப்­பட்­டார்.
இந்­தக் கொடூ­ரச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் 3 மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அடங்­கிய தீர்ப்­பா­யம் (ட்ரயல் அட் பார்)    முன்­னி­லை­யில் இடம்­பெற்று வரு­கி­றது.
மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் தலை­மை­யில் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­கள் அன்­ன­லிங்­கம் பிரே­ம­சங்­கர், மாணிக்­க­வா­ச­கர் இளஞ்­செ­ழி­யன்          ஆகி­யோர் அடங்­கிய தீர்ப்­பாய அமர்­வின் 8ஆம் நாள் சாட்­சி­யப் பதி­வு­கள் நேற்­றுக் காலை 9 மணி­ய­ள­வில் யாழ்ப்­பா­ணம் நீதி­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யின் 2ஆவது மாடி­யி­லுள்ள திறந்த மன்­றில் கூடி­யது.
வழக்­குத் தொடு­னர் சார்­பில் பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி பி. குமா­ர­ரட்­ணம்       தலை­மை­யில் அரச சட்­ட­வா­தி­கள் நாக­ரத்­தி­னம் நிஷாந்த், லக்சி டீ சில்வா மற்­றும் மாலினி விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யா­கி­யி­ருந்­த­னர்.
1ம் ,2ம் , 3ம் , மற்­றும் 6ஆம் எதி­ரி­கள் சார்­பில் சட்­டத்­த­ரணி மகிந்த ஜெய­வர்த்­தன , எம். என். நிஷாம் மற்­றும் சட்­டத்­த­ரணி லியகே ஆகி­யோ­ரும் 5ஆம் எதி­ரி­யின்     சார்­பில் சட்­டத்­த­ரணி ஆறு­மு­கம் ரகு­ப­தி­யும் 4ம், 7ம் , மற்­றும் 9ஆம் எதி­ரி­கள்      சார்­பில் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் ஆகி­யோர் முன்­னி­லை­யாகி இருந்­த­னர்.
அத்­து­டன் 8ஆம் எதிரி சார்­பி­லும் தீர்ப்­பா­யத்­தால் ஒன்று தொடக்­கம் 9 வரை­யான எதி­ரி­கள் சார்­பில் நிய­மிக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி விக்­னேஸ்­வ­ரன் ஜெயந்­தா­வும் முன்­னி­லை­யா­கி­னார்.
பூபா­ல­சிங்­கம் இந்­தி­ர­கு­மார், பூபா­ல­சிங்­கம் ஜெயக்­கு­மார், பூபா­ல­சிங்­கம்             தவக்­கு­மார் , மகா­லிங்­கம் சசி­த­ரன் , தில்­லை­நா­தன் சந்­தி­ர­கா­சன் ,                             சிவ­தே­வன் துஷாந்த் , பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் , ஜெய­த­ரன் கோகி­லன் , மற்­றும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் ஆகிய ஒன்­பது எதி­ரி­க­ளும் தீர்ப்­பா­யத்­தில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.
இந்த வழக்­கின் 49ஆவது சாட்­சி­ய­மான ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்ற நீதி­வானை எதிர்­வ­ரும் 24ஆம் திகதி திங்­கட்­கி­ழமை மதி­யம் 2 மணிக்கு சாட்­சி­ய­ம­ளிக்க          முன்­னி­லை­யா­கு­மா­றும் அன்­றைய தினம் வழக்­கின் 52ஆவது சாட்­சி­ய­மான         இர­சா­யன பகுப்­பாய்­வுத் திணைக்­க­ளத்­தின் மூத்த அதி­கா­ரி­யை­யும் மறு­நாள் 53ஆவது சாட்­சி­ய­மான ஜின்­டெக் நிறு­வ­னத்­தின் மூத்த விஞ்­ஞா­னி­யை­யும்         சாட்­சி­ய­ம­ளிக்க தீர்ப்­பா­யத்­தில் முன்­னி­லை­யாக அழைப்­பாணை விடுக்­கு­மாறு பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி விண்­ணப்­பம் செய்­தார்.
அதனை ஏற்­றுக்­கொண்ட தீர்ப்­பா­யம் சாட்­சி­க­ளுக்­கான அழைப்­பா­ணையை அனுப்பி வைக்க யாழ்ப்­பாண மேல் நீதி­மன்­றப் பதி­வா­ள­ருக்­குக் கட்­ட­ளை­யிட்­டது.
அதனை தொடர்ந்து வழக்­கின் 41ஆவது சாட்­சி­ய­மான கொடி­கா­மம் பொலிஸ் நிலைய முன்­னாள் பொறுப்­ப­தி­காரி சிந்­தக்க நிஷாந்த பிரிய பண்­டார                        சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“சம்­ப­வம் நடை­பெற்ற காலப் பகு­தி­யில் நான் கொடி­கா­மம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்றி வந்­தேன். 2015ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் லக்ஸ்­மன் வீர­சே­கர, யாழப்­பாண நக­ரில் ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெ­று­வ­தா­க­வும் , அத­னால் அதற்­கான பாது­காப்பு                ஏற்­பா­டு­க­ளுக்­காக யாழ்ப்­பா­ணம் வரு­மாறு என்னை அழைத்­தி­ருந்­தார்.
அதன் பிர­கா­ரம் நான் யாழ்ப்­பா­ணம் வந்­தேன். அப்­போது யாழ்ப்­பா­ணம் சிறைச்­சாலை மீது போராட்­ட­கா­ரர்­கள் தாக்­கு­தல் நடாத்­து­வ­தா­க­வும் , அத­னைக்                 கட்­டுப்­ப­டுத்த அங்கே செல்­லு­மாறு எனக்­குப் பணிக்­கப்­பட்­டது. அதனை அடுத்து நான் அங்கே சென்­றி­ருந்­தேன். அங்கே இடம்­பெற்ற தாக்­கு­தல் கார­ண­மாக எனது கைக­ளில் காயங்­கள் ஏற்­பட்­டன.
அத­னால் நான் அங்­கி­ருந்து விலகி சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா       வைத்­தி­ய­சா­லைக்­குச் சென்­றி­ருந்­தேன். அன்­றைய தினம் வைத்­தி­ய­சா­லை­யில் தங்கி சிகிச்சை பெற்­றேன். மறு­நாள் (21ஆம் திகதி ) காலை 7.30 மணி­ய­ள­வில்         என்­னைத் தனது அலு­வ­ல­கத்­துக்கு வரு­மாறு மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்  பணித்­தார்.
அத­னை­ய­டுத்து நான் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து அவ­ரது அலு­வ­ல­கத்­துக்­குச்  சென்­றி­ருந்­தேன். அங்கே புங்­கு­டு­தீவு மாணவி கொலை வழக்­கு­டன் தொடர்­பு­டைய சந்­தே­க­ந­பர் ஒரு­வர் உள்­ளார் என­வும் அவ­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் எனக்­குப் பணித்­தார்.
அதன் பிர­கா­ரம் நான் அவ­ரி­டம் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தேன். விசா­ர­ணை­கள் ஊடாக, அவர் சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என அறிந்து கொண்­டேன். அவர் மீது மாணவி கடத்­தல், வன்­பு­ணர்வு மற்­றும் கொலை ஆகிய குற்­றங்­கள் சுமத்­தப்­பட்­டன. அது தொடர்­பான முதல் அறிக்கை நீதி­மன்­றில் தாக்­கல் செய்­தேன்.
அத்­து­டன் சந்­தே­க­ந­பரை பிணை­யில் விடு­வித்­தால் கல­வ­ரங்­கள் ஏற்­ப­ட­லாம் ,     சந்­தே­க­ந­ப­ரின் உயி­ருக்கு ஆபத்து ஏற்­ப­ட­லாம், ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெ­றும்,        சந்­தேக நபர் வெளி­நாட்டு குடி­யு­ரிமை பெற்­றுள்­ள­மை­யால் வெளி­நாட்­டுக்கு தப்­பிச் செல்­வ­தற்கு சந்­தர்ப்­பங்­கள் உள்­ளன போன்ற கார­ணங்­க­ளைக் குறிப்­பிட்டு பிணைக் கட்­டளை சட்­டத்­தின் கீழ் சந்­தே­க­ந­ப­ருக்கு பிணை வழங்க வேண்­டாம் என          ஆட்­சே­பனை தெரி­வித்­தும் நீதி­மன்­றில் அறிக்கை சமர்ப்­பித்­தேன்” என்று              முன்­னாள் தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் சிந்­தக்க பண்­டார சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அதனை தொடர்ந்து எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் குறுக்கு விசா­ர­ணை­க­ளின் போது,
கேள்வி :- உமது விசா­ர­ணை­யின் போது ஒன்­ப­தா­வது சந்­தே­க­ந­பர்­தான் சம்­ப­வம் இடம்­பெற்ற கால பகு­தி­யில் கொழும்­பில் இருந்­த­தாக தெரி­வித்­தாரா?
பதில் :- ஆம்.
கேள்வி :- அப்­ப­டி­யா­யின் அவர் எப்­படி இந்­தக் குற்­றச்­செ­ய­லு­டன் தொடர்­பு­பட்­டார் ?
பதில் :- அவ­ரி­டம் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளின் போது, இந்த குற்­றச்­செ­ய­லு­டன் இவ­ருக்கு தொடர்பு இருப்­ப­தாக எனக்கு சந்­தே­கம் ஏற்­பட்­டது.
ஒன்­ப­தா­வது சந்­தே­க­ந­பர் கொழும்­பில் நின்­ற­மைக்­கான சாட்சி ஆதா­ரம் எது­வும் கொடுத்­தாரா ? என சாட்­சி­யி­டம் தீர்ப்­பா­யம் கேள்வி எழுப்­பி­யது. அதற்கு சாட்சி இல்லை எனப் பதி­ல­ளித்­தார்.
அதனை தொடர்ந்து எதி­ரி­கள் தரப்­புச் சட்­டத்­த­ரணி சின்­ன­ராசா கேதீஸ்­வ­ரன் , “நான் ஒன்­ப­தா­வது எதிரி தரப்­பில் கூறு­கி­றேன். நீர் மேல் அதி­கா­ரி­யின் உத்­த­ர­வின் பேரில் விசா­ர­ணை­கள் எது­வும் முன்­னெ­டுக்­கா­மல் , முதல் அறிக்­கை­யைத் தயார் செய்து சந்­தே­க­ந­பர் சுவிஸ்­கு­மாரை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தி­யி­ருந்­தீர் என்று           சாட்­சி­யி­டம் கேட்­டார்.
“அதனை நான் முற்­றாக மறுக்­கி­றேன். நான் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தேன்” எனச் சாட்சி தெரி­வித்­தார்.
முன்­னாள் தலை­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் சிந்­தக்க பண்­டா­ர­வின் சாட்­சிப்        பதி­வு­கள் முடி­வு­றுத்­தப்­பட்டு அவர் வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.
அதனை தொடர்ந்து வழக்­கின் 44ஆவது சாட்­சி­ய­மான , கொழும்­பில் உள்ள கசீனோ நிலை­யம் ஒன்­றின் முகா­மை­யா­ள­ரான பிரி­யந்த பஸ்­ஸ­நா­யக்க சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“எமது கசீனோ நிலை­யத்­துக்கு வந்­தி­ருந்த குற்­றத்­த­டுப்பு புல­னாய்வு பிரி­வி­னர்  ஒரு­வ­ரின் பெயரை கூறி அவர் 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி இங்கு    வந்­தி­ருந்­தாரா ? என கேட்­ட­னர். நான் அவர்­கள் கூறிய பெய­ரைப் பதி­வேட்­டில் தேடி­னேன். இல்லை. அங்­கத்­த­வரா? எனத் தேடி­னேன். அந்த நபர் அங்­கத்­த­வ­ரும் இல்லை.
அதன் பின்­னர் அவர்­கள் சி.சி.ரி.வி காணொ­லிப் பதி­வு­க­ளைப் பார்த்­த­னர். அதில் அவர்­கள் ஒரு­வரை அடை­யா­ளம் கண்டு கொண்­ட­னர். அந்த நபர் அன்­றைய தினம் (13ஆம் திகதி) பகல் வேளை முச்­சக்­கர வண்­டி­யில் ஒரு­வ­ரு­டன் வந்­தி­றங்கி உள்ளே வந்து இருந்­தார்.
குற்­றத்­த­டுப்­புப் புல­னாய்­வா­ளர்­கள் முச்­ச­க­ர­வண்­டி­யில் வந்­தி­றங்­கிய மற்­று­மொரு நப­ரு­ட­னேயே வந்­தி­ருந்­த­னர்” என அவர் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அன்­றைய தினம் (13ஆம் திகதி) சி.சி.ரி.வி காணொ­லிப் பதி­வு­களை பார்­வை­யிட்டு அடை­யா­ளம் கண்டு கொண்ட நபர் எதிரி கூண்­டில் நான்­கா­வ­தாக உள்­ளார்         (மகா­லிங்­கம் சசி­த­ரன்) என சாட்சி அடை­யா­ளம் காட்­டி­னார். அதனை தொடர்ந்து அவ­ரது சாட்­சிப் பதி­வு­கள் முடி­வு­றுத்­தப்­பட்­டது.
அதனை அடுத்து வழக்­கின் 45ஆவது சாட்­சி­யான ஆறு­மு­கம் செல்­வக்­கு­மார்          என்­ப­வர் சாட்­சி­ய­ம­ளிக்­கை­யில் ,
“நான் கொழும்­பில் ரெஸ்­டா­ரன்ட் ஒன்­றில் வெயிட்­ட­ராக உள்­ளேன். 13ஆம் திகதி மாலை 5 மணி­ய­ள­வில் ரெஸ்­டா­ரன்ட்க்கு 5 , 6 பேர் வந்­தார்­கள் அவர்­கள் சாரா­யம் , கொக்­க­கோல மற்­றும் உணவு ஆகி­ய­வற்றை வாங்­கி­னார்­கள். அங்கே சுமார் 45  நிமி­டங்­கள் அவர்­கள் இருந்­தார்­கள்.
அவர்­கள் எதிரி கூண்­டில் 7ஆவ­தாக (பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன் ) உள்ள நபர்        அடி­கடி அங்கு வரு­வார். 4 ஆவ­தாக உள்ள (மகா­லிங்­கம் சசி­த­ரன் ) நபர் எப்­பா­வது இருந்­துட்ட 7ஆவது நப­ரு­டன் வரு­வார். 9ஆவ­தாக உள்ள நபர் ( மகா­லிங்­கம்-           சசிக்­கு­மார்) 13ஆம் திகதி அன்றே வந்­தி­ருந்­தார்.
அவர் தொப்பி அணிந்து வந்து உள்ளே வந்­த­தும் தொப்­பியை மேசை மீது கழற்­றி­வைத்­தார்” என சாட்­சி­யம் அளித்­தார்.
அதனை தொடர்ந்து அவ­ரது சாட்­சி­யம் முடி­வு­றுத்­தப்­பட்­டது.
அதனை அடுத்து வழக்­கின் 46ஆவது சாட்­சி­யான இரா­மையா கன­கேஸ்­வ­ரன்     சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“நான் கொழும்பு வெள்­ள­வத்­தைப் பகு­தி­யில் தங்­கு­மிட விடுதி ஒன்றை நடாத்தி வரு­கி­றேன்.
எமது தங்­கு­மி­டத்­தில் தங்­கு­ப­வர்­க­ளின் பெயர் விவ­ரங்­களை எடுத்து அவர்­க­ளின் அடை­யாள அட்டை அல்­லது கட­வுச்­சீட்டு என்­ப­வற்றை பிரதி எடுத்தே தங்க       அனு­ம­திப்­போம். எமது தங்­கு­மி­டத்­தில் தங்­கு­ப­வர்­க­ளின் பெயர் விவ­ரங்­கள்           தின­மும் அரு­கில் உள்ள பொலிஸ் நிலை­யத்­துக்கு அனுப்பி வைப்­போம்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி எமது தங்­கு­மி­டத்தை வெள்­ள­வைத்­தைப் பொலி­ஸார் சுற்றி வளைத்து தேடு­தல் நடாத்­து­வ­தாக அங்கு வேலை செய்­யும்  ஒரு­வர் எனக்கு அறி­வித்­தார். நான் உடனே அங்கே சென்­றேன்.
அவர்­கள் எமது தங்­கு­மி­டத்­தில் தங்கி இருந்த சுவிஸ்­கு­மார் என அழைக்­கப்­ப­டும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என்­ப­வரை கைது செய்து பொலிஸ் நிலை­யம் அழைத்­துச் சென்­ற­னர். அதன் போது அவ­ரு­டன் அங்கு தங்­கி­யி­ருந்த அவ­ரது மனைவி மற்­றும் கைக்­கு­ழந்தை ஆகி­யோர் எமது தங்­கு­மி­டத்­தி­லையே தங்­கி­யி­ருந்­த­னர்.
அப்­போது கைது செய்து கொண்டு செல்­லப்­ப­டும் நபர் அன்­றைய தினம் (19ஆம் திகதி) காலை­யில்­தான் வான் ஒன்­றில் வந்­தி­றங்­கித் தங்­கி­ய­தாக அங்கு வேலை செய்­யும் ஒரு­வர் தெரி­வித்­தார்.
அன்­றைய தினம் (19ஆம் திகதி) கைது செய்­யப்­பட்ட சுவிஸ்­கு­மார் என்­ப­வர்         தன்­னு­டன் மேலும் மூவரை அழைத்து வந்து 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை­யான காலப் பகு­தி­யில் எதி­ரிக்­கூண்­டில் 4ஆவ­தாக நிற்­கும் (மகா­லிங்­கம் சசி­த­ரன் ) , 7ஆவ­தாக நிற்­கும் (பழனி ரூப­சிங்­கம் குக­நா­தன்) மற்­றும் 8 ஆவ­தாக நிற்­கும் (ஜெய­த­ரன் கோகி­லன்) ஆகிய நபர்­க­ளு­டன் எமது      தங்­கு­மி­டத்­தில் தங்­கி­யி­ருந்­தார்­கள்.
14ஆம் திகதி ஊரில் ஒரு இறு­திச் சடங்கு இருப்­ப­தா­க­வும் தாம் ஊருக்கு போகப் போவ­தா­கக் கூறிச் சென்­றார்­கள். அதன்­போது அவர்­கள் எமக்கு தங்­கு­மிட வாடகை காசு 12 ஆயி­ரம் ரூபாய் தர வேண்­டும்.
அந்­தப் பணத்தை மோதரை என்ற இடத்­தில் பெற்­றுத்­த­ரு­வ­தா­கக் கூறி, பணத்தை வழங்க விடு­தி­யில் வேலை செய்­யும் ஒரு­வ­ரைத் தம்­மு­டன் அனுப்­பு­மாறு        கோரி­னார்­கள்.
ஒரு பையனை பணத்தை பெற்று வர அவர்­க­ளு­டன் நானும் அனுப்­பி­னேன்.         அவர்­கள் சிறிது தூரம் சென்று ஆயி­ரம் ரூபா பணத்­தைக் கொடுத்­து­விட்டு                  மிகு­தியை எனது பெய­ரில் வங்­கி­யில் வைப்­புச் செய்­து­வி­டு­வ­தாக கூறி அந்­தப் பையனை திருப்பி அனுப்­பி­விட்­ட­னர்.
எங்­கள் தங்­கு­மி­டத்­திற்கு முன்­பாக புங்­கு­டு­தீவை சேர்ந்­த­வர்­கள் உண­வ­கம் நடாத்தி வரு­கின்­றார்­கள். அவர்­கள் 18ஆம் திகதி காலை சொன்­னார்­கள் “உங்­கள் தங்­கு        ­மி­டத்­தில் தங்­கி­யி­ருந்­த­வர்­கள்­தான் , புங்­கு­டு­தீ­வில் பாட­சாலை மாணவி ஒரு­வரை கடத்தி , வன்­பு­ணர்ந்து , கொலை செய்­த­வர்­கள் “ என இணை­யத்­த­ளங்­க­ளில்           செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன என்று.
உடனே நான் எனது மரு­ம­கனை அழைத்து மடிக்­க­ணி­யில் இணை­யத்­த­ளத்­தில் அந்த செய்­தி­யைப் பார்த்­தேன். அதில் சுவிஸ்­கு­மார் மின் கம்­பம் ஒன்­றில் கட்டி வைத்து தாக்­கப்­ப­டும் படம் இருந்­தது” எனச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.
“சாட்சி உங்­க­ளு­டைய விடு­தி­யி­லுள்ள பதி­வுப் புத்­தக்தை வைத்­துத்­தானே சந்­தே­க­ ந­பர்­கள் தங்­கி­யி­ருந்த காலப் பகு­தி­யைக் கூறு­கின்­றீர்­கள்? ” சாட்­சி­யி­டம் தீர்ப்­பா­யம் கேள்வி எழுப்­பி­யது. அதற்கு சாட்சி, ஆம் என்று பதி­ல­ளித்­தார்.
”சாட்சி அப்­ப­டி­யா­யின் புத்­த­கத்­தில் பதிவு இருந்­தா­லும் அந்த நபர் விடு­தி­யி­லி­ருந்து வெளியே சென்­றி­ருந்­தால் தெரி­யா­து­தானே? என்று தீர்ப்­பா­யம் மீண்­டும் கேள்­வி­யெ­ழுப்­பி­யது. அதற்கு சாட்சி ஆம் என்று பதி­ல­ளித்­தார்.
அத­னைத் தொடர்ந்து அவ­ரது சாட்சி பதி­வு­கள் முடி­வு­றுத்­தப்­பட்டு , சாட்சி வழக்­கி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.
அதை­ய­டுத்து வழக்­கின் 51ஆவது சாட்­சி­யான ரஞ்­சித் பால­சூ­ரிய சாட்­சி­யம்          அளிக்­கை­யில்,
சம்­ப­வம் இடம்­பெற்ற கால பகு­தி­யில் நான் யாழ்ப்­பாண பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­யாக கட­மை­யாற்றி வந்­தேன். மாணவி கொலை வழக்கு தொடர்­பில் எமது பொலிஸ் நிலை­யத்­தால் எந்த விசா­ர­ணை­க­ளும் முன்­னே­டுக்­கப்­ப­ட­வில்லை.
இருந்த போதி­லும் எமது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரி­சோ­த­கர் சிறி­க­ஜன் தலை­மை­யில் ஒரு சிறப்­புப் பொலிஸ் குழுவை மாணவி கொலை வழக்கு தொடர்­பில் விசா­ரணை செய்ய மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் அமைத்­தி­ருந்­தார்.
மாணவி கொலை வழக்கு தொடர்­பில் சிறி­க­ஜன் எந்த ஒரு சந்­தே­க­ந­ப­ரை­யும் கைது செய்து எமது பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­த­வில்லை.
பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி என்ற வகை­யில் எவ­ரை­யா­வது கைது செய்து பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னால் எனக்கு அறி­விக்க வேண்­டும். ஆனால் மாணவி கொலை வழக்கு தொடர்­பில் சிறி­க­ஜன் ஒரு­வ­ரைக் கைது செய்­தார்        என்­றும் அவர் பின்­னர் விடு­விப்­பட்­டார் என்­றும் ஒரு பிரச்­சனை நடந்­த­தாக அறிந்து கொண்­டேன். 

சிறி­க­ஜன் புங்­கு­டு­தீ­வில் இருந்து மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என்­ப­வரை அழைத்து வந்து , சசிக்­கு­மார் என்­ப­வர் மீது தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டமை தொடர்­பில் முறைப்­பாடு ஒன்­றைப் பதிவு செய்­துள்­ளார். அந்த முறைப்­பாட்­டின் பின்­னர் சட்ட மருத்­துவ அதி­கா­ரி­யி­டம் சசிக்­கு­மார் அழைத்து செல்­லப்­பட்­டுள்­ளார்.
வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் கூறி­ய­தாக , சிறி­க­ஜன் கூறி­னார் “சுவிஸ் குமார் நாட்டை விட்டு தப்பி செல்­லா­மல் இருக்க கட்­டு­நா­யக்க     பன்­னாட்டு வானூர்தி நிலை­யப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்க வேண்­டும்” என்று. “அது தொடர்­பில் நீதி­மன்ற கட்­ட­ளை­யைப் பெற்று உடன் நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் நான் அவ­ருக்­குப் பணித்­தேன்.
ஆனால் அது தொடர்­பில் எந்த நட­வ­டிக்­கை­யும் சிறி­க­ஜன் எடுக்­க­வில்லை. 19ஆம் திகதி யாழ்ப்­ப­ணத்­தில் , போராட்­டங்­கள் , கடை­ய­டைப்பு நடை­பெற்­றன. 20ஆம் திகதி யாழ்ப்­பாண நகர் உட்­பட புற நகர் பகு­தி­கள் எங்­கும் போராட்­டங்­கள் ,       கடை­ய­டைப்பு  நடை­பெற்­றன.
மாணவி கொலை வழக்கு தொடர்­பில் கைது செய்­ய­பப்ட்ட 5 சந்­தே­க­ந­பர்­க­ளும் யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­மை­யால் , அவர்­களை யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என மக்­கள் யாழ்ப்­பாண நீதி­மன்ற கட்­ட­டத் தொகு­தி­யைச் சூழ்ந்­த­னர்.
மாணவி கொலை வழக்­கில் சட்­டம் நீதி காப்­பற்­றப்­பட வேண்­டும் என­வும் , சந்­தே­க­ந­பர் ஒரு­வரை தப்பி செல்ல உத­வி­ய­தற்கு எதிர்ப்பு தெரி­வித்­தும் கிளர்ந்­தெ­ழுந்த மக்­கள் நீதி­மன்ற கட்ட தொகுதி , சிறைச்­சாலை வாக­னம் , யாழ்ப்­பா­ணச் சிறைச்­சாலை, யாழ்ப்­பாண பொலிஸ் நிலை­யம் மற்­றும் யாழ்.நகர் பகு­தி­யில் இருந்த சில கடை­கள் மீது கற்­க­ளால் வீசி தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­னர்.
அந்த தாக்­கு­தல் சம்­ப­வம்­தொ­டர்­பில் அப்­போது 139 பேர் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­ய­பப்ட்­டது.
கிளி­நொச்சி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி 21ஆம் திகதி அதி­கா­லை­தான் சுவிஸ் குமார் எனும் மகா­லிங்­கம் சசிக்­கு­மார் என்­ப­வரை என்­னி­டம் பாரம் தந்­தார்” என சாட்­சி­ய­ம­ளித்­தார்.
அதனை தொடர்ந்து அவ­ரது சாட்­சி­யம் முடி­வு­றுத்­தப்­பட்­டது.
அதை­ய­டுத்து , பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி, இந்த வழக்­கின் 47 மற்­றும் 48ஆவது சாட்­சி­யங்­களை விடு­விப்­ப­தாக தீர்ப்­பா­யத்­தில் விண்­ணப்­பம் செய்­தார். அதனை தீர்ப்­பா­யம் ஏற்று குறித்த இரு சாட்­சி­யங்­க­ளை­யும் வழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­வித்­தது.
நேற்­றைய வழக்கு விசா­ர­ணை­கள் மதி­யம் 12.45 மணி­யு­டன் நிறை­வ­டைந்­தது.  தீர்ப்­பாய அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அது­வ­ரை­யில் சந்­தே­க­ந­பர்­கள் ஒன்­பது பேரை­யும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு தீர்ப்­பா­யம் உத்­த­ர­விட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget