Ads (728x90)

திரு­கோ­ண­ம­லையில்  இந்­தியா, ஜப்பான்  இணைந்த கூட்டு நிறு­வனம்  திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை  அமைப்­ப­தற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­ யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்  ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்ற முற்­பகல் அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது. 

இதன்­போது திரு­கோ­ண­ம­லையில் திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு இந்­திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறு­வ­னத்­திற்கு அனு­மதி அளிப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது.  சுமார் ஒரு­ம­ணி­நேரம் இடம்­பெற்ற கடும் வாதப்­பி­ர­தி­வா­தங்­க­ளுக்கு மத்­தியில் இதனை அமைப்­ப­தற்­கான அனு­ம­தியை வழங்­கு­வது என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. 
இந்த  விவ­கா­ரத்தின் போது ஐக்­கிய தேசி­யக்­கட்சி அமைச்­சர்கள் திரு­கோ­ண­ம­லையில் திரவ இயற்கை  வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு இந்­திய நிறு­வ­னத்­திற்கு  அனு­மதி வழங்­க­வேண்டும் என்று வாதிட்­டுள்­ளனர்.  சுதந்­தி­ரக்­கட்சி அமைச்­சர்கள் இதற்கு எதி­ராக வாதிட்­ட­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.  இரு­த­ரப்­பி­னரும்  ஒரு­ம­ணி­நேரம் வாதப் பிர­தி­வா­தத்தில்  ஈடு­பட்­டுள்­ளனர். 
அம்­பாந்­தோட்டை  துறை­மு­கத்தை சீனா­விற்கு குத்­த­கைக்கு வழங்­கி­யுள்­ள­மை­யினால்  திரு­கோ­ண­ம­லையில் இந்­திய நிறு­வனம் திரவ இயற்கை வாயுத் தொழிற்­சா­லையை ஆரம்­பிப்­ப­தற்கு  அனு­மதி அளிக்­க­வேண்டும்.  இல்­லையேல்  எதிர்­கா­லத்தில் அது பெரும் பிரச்­சி­னை­யாக மாறும் நிலை காணப்­ப­டு­கின்­றது என்று சில அமைச்­சர்கள் இதன்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 
இதன்­போது கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்த திரவ இயற்கை வாயு தொழிற்­சா­லையை அமைப்­ப­தற்கு கொரி­யாவும்  விலை மனுக்­கோ­ரி­யுள்­ளது.  எனவே  இந்த விலை­ம­னு­விற்­கேற்­பவும்  இதன் நிபந்­த­னை­க­ளுக்கு அமை­யவும் இதற்­கான அனு­ம­தி­யினை இந்­திய ,  ஜப்பான்  இணைந்த கூட்டு நிறு­வ­னத்­திற்கு வழங்­கு­மாறு கூறி­யுள்ளார். 
இந்த விவ­கா­ரத்தின் போது கருத்து தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க திரு­கோ­ண­மலை சம்­பூரில் அனல் மின்­நி­லையம்  அமைப்­ப­தற்கு இந்­தி­யா­விற்கு  முன்னர் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் சுற்­றுச்­சூழல் பாதிப்பை காரணம் காட்டி அந்தத் திட்டம்  நிறுத்­தப்­பட்­டது.  அதே­போன்று  தற்­போது திரவ இயற்கை வாயு  தொழிற்­சா­லையை ஆரம்­பிப்­ப­தற்கு  இந்­திய ஜப்பான் கூட்டு நிறு­வ­னத்­திற்கு அனு­மதி அளித்து விட்டு அதனை ரத்து செய்ய முயன்றால் அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று கூறியதாக தெரிகின்றது. 
இதனையடுத்து திருமலையில் திரவ இயற்கை வாயு தொழிற்சாலையை இந்திய ஜப்பான் இணைந்த கூட்டு நிறுவனத்திற்கு வழங்குவது என்று அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கூட்டுறவு சங்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்பினையும் இரத்துச் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget