Ads (728x90)

ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யாளர் பென் எமர்சன் சிறைச்­சா­லை­க­ளுக்கு  விஜயம் செய்­வ­தற்கு யார் அனு­மதி அளித்­தது என்று ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன கேள்வி எழுப்­பி­யுள்ளார்.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத் தில் நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது.  இந்­தக்­கூட்­டத்­தி­லேயே ஜனா­தி­பதி இந்தக் கேள்­வியை எழுப்­பி­யி­ருக்­கின்றார். 
 பென் எமர்சன் சிறைச்­சா­லை­க­ளுக்கு விஜயம் செய்து கைதி­களை சந்­தித்­துள்ளார். எந்த அடிப்­ப­டையில் இவர் சிறைச்­சா­லை­க­ளுக்கு விஜயம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. யார் இதற்­கான அனு­ம­தி­யினை வழங்­கி­யது. நீதி அமைச்சா, சிறைச்­சாலை  அமைச்சா, அல்­லது  வெளி­வி­வ­கார அமைச்சா இதற்­கான அனு­ம­தியை வழங்­கி­யது யார் என்று ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பி­யுள்ளார். 
 இதற்கு  இந்த மூன்று துறை­களைச் சேர்ந்த அமைச்­சர்­களும் இவ்­வி­டயம் குறித்து தமக்கு எதுவும் தெரி­யாது என்று கூறி­யுள்­ளனர்.  இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முன்­னைய அர­சாங்க காலத்தில்  மேற்­கொள்­ளப்­பட்ட உடன்­பாடு கார­ண­மாக ஐ.நா.வின் விசேட அறிக்­கை­யா­ளர்கள்  புரிந்­து­ணர்வின் அடிப்படையில்  இவ்வாறு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக  இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

Recent News

Recent Posts Widget