Ads (728x90)

தேர்­தலை பிற்போடும் திட்­டத்­திலே அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் அலரி மாளி­கையில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது. அதில் மாட்­டிக்­ கொள்­ளாமல் இருப்­ப­தற்கே கூட்டு எதிர்க்­கட்சி அக்கூட்டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை என­்று ஜ­ன­நா­யக இட­து­சாரி முன்னணியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.
அத்­துடன் தொடர்ந்து தேர்­தல்கள் பிற் போடப்படுமானால் தேர்­தல்கள் ஆணைக்­குழு நூத­ன­சா­லை­யாக மாறும் நிலையே ஏற்­ப­டு­மெ­னவும் அவர் குறிப்­பிட்டார்.
சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று முன்தினம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறு­கையில்,
மக்­களின் வாக்­க­ளிக்கும் ஜன­நா­யக உரி­மையை தொடர்ந்தும் மீறு­வ­தற்கு மக் கள் இட­ம­ளிப்பார்கள் என அர­சாங்கம் நினைத்­து­ கொண்­டி­ருக்­கின்­றது. அத்­துடன் தேர்­தலை பிற்­போடுவதற்கு இரண்­டு ­வ­ரு­டங்­க­ளாக பல கார­ணங்­களை தெரி­வித்து வரு­கின்­றது. இதன் கார­ண­மாக பிர­தேச சபை­க­ளுக்குட்­பட்ட கிரா­மங்கள் எந்த அபி­வி­ருத்­தியும் இல்­லாமல் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இதனால் ஏற்­பட்­டி­ருக்கும் அனர்த்­தங்­க­ளுக்கு அர­சாங்கம் பொறுப்புக் கூற­ வேண்டும்.
அத்­துடன் அர­சாங்கம் மக்­களின் ஜன­நா­யக உரி­மையை பாது­காப்­ப­தாக தெரி­வித்து வரு­கின்­றது. ஆனால் மக்­களின் சர்­வ­ஜன வாக்­கு­ரிமை மீறப்­பட்டு வரு­கின்­றமை தொடர்­பாக எந்த மனித உரிமை அமைப்­பு­களும் கதைப்­ப­தில்லை. மக்­களின் ஜன­நா­யக உரி­மையில் வாக்­கு­ரி­மையே பிர­தா­ன­மாகும். அதி­லி­ருந்தே ஏனைய உரி­மைகள் தங்­கி­யுள்­ளன. ஆனால் உள்­ளூ­ராட்சிமன்றத் தேர்­தலை நடத்­து­மாறு அர­சாங்­கத்­துக்கு எந்த சர்­வ­தேச அமைப்­பு­களும் அழுத்தம் கொடுப்­ப­தாக தெரி­ய­வில்லை.
அதனால் மக்­களின் தேர்தல் உரி­மையை அர­சாங்கம் தொடர்ந்தும் மீறி வரு­வ­த னால், அர­சாங்கம் உண­ரும் ­வ­கையில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து உரிய பதில் ஒன்றை கொடுக்­க­வுள்ளோம். அதற்­கான வேலைத்­திட்­டத்தை தற்­போது நாங்கள் மேற்­கொண்டு செல்­கின்றோம். அதற்குள் அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்த நட­வ­டிக்கை எடுக்­கா­ விட்டால் மக்கள் தங்­களின் வாக்­கு­ரி­மையை பாது­காக்க வீதிக்­கி­றங்­கு­வார்கள்.
எனவே உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை தொடர்ந்து பிற்போ­டு­வ­தற்கே பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் அலரி மாளி­கையில் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக் கொள்ளாமல் இருப்ப தற்கே கூட்டு எதிர்க்கட்சி  அதில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் மக்களின் வாக்குரிமையை மீறி வரும் அரசாங்கம் உணரும் வகையில் எதிர்வரும் சில தினங் களில் உரிய பதிலொன்றை கொடுப்போம் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget