Ads (728x90)

இலங்கை - இந்­திய அணி­க­ளுக்கு இடையே கடந்த 27 ஆம் திகதி இடம்­பெற்ற ஒரு நாள் சர்­வ­தேச போட்­டியின் போது, இலங்கை வீரர்­களை இலக்கு வைத்து கல், தண்ணீர் போத்­தல்களை வீசி தாக்­குதல் நடத்­திய ரசி­கர்­களை கைது செய்ய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின்  ஆலோ­ச­னைக்கு அமைய மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைக்கு அமைய இதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.
இதற்­கா­க­ வேண்டி குறித்த போத்தல் வீச்சு, கல் வீச்சு காட்­சிகள் பதி­வா­கி­யி­ருக்கும் சி.சி.ரி.வி. காணொ­ளி­களை பொலிஸார் பரீட்­சித்து வரு­வ­தா­கவும், இலங்­கையின் பெய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தும் வித­மாக நடந்­து­ கொண்ட குறித்த ரசி­கர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் எனவும் அந்த தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.
இத­னி­டையே இன்று நடை பெற­வுள்ள இலங்கை இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­லான நான்­கா­வது ஒரு நாள் சர்­வ­தேச போட்­டிக்கு மூன்­ற­டுக்கு பாது­காப்பு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்­தி­நா­யக்க கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாலிய சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் இந்த பாது­க­ாப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­காக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர், கல­க­ம­டக்கும் பொலிஸார் மைதா­னத்தில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­துடன் சீரு­டை­யிலும் சிவில் உடையிலும் பொலிஸார் ரசி­கர்­க­ளுடன் ரசி­கர்­க­ளாக இருந்தும் கடமைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன் போது விரும்பத்தகாத நடவடி க்கைகளில் ஈடுபடும் ரசிகர்கள்  சட்டத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாக தெரிகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget