Ads (728x90)

ஸ்ரீ  லங்கா சுதந்­திர கட்­சியை சேர்ந்த ஆறு உறுப்­பி­னர்­க­ளு­டைய கட்சி உறுப்­பு­ரி­மையை நீக்க அக்­கட்சி தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை சேர்ந்­த­வர்­களும் தற்­போ­தைய கூட்டு எதி­ர­ணியில் அங்கம் வகிக்­கின்ற நிலை­யி­லேயே இவர்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்டு உறுப்­பு­ரிமை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக பவித்­தி­ரா­தேவி வன்­னி­ய­ாராச்சி, றோஹித அபே­கு­ண­வர்­தன, பிர­சன்ன ரண­துங்க, பிர­சன்ன ரண­வீர, சனத் நிஷாந்த மற்றும் லொஹான் ரத்­வத்தே ஆகி­யோரின் கட்சி உறுப்­பு­ரிமை இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ளது.
கட்­சியின் தீர்­மா­னங்­களை ஏற்­றுக்­கொள்­ள­ாமலும் அவற்றை பொருட்­ப­டுத்­தா­மலும் விதி­க­ளுக்கு முர­ணான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மை­யுமே இவர்கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட பிர­தான காரணம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எவ்­வா­றா­யினும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கட்சி உறுப்­பு­ரி­மையை இழக்கும் போது அவர்­களின் பாரா­ளு­மன்ற உறுப்­பு­ரி­மையும் இரத்­தாகும் என்­பதும் குறிப்­பி­டத்­தக்க விடயமாகும்.
அதேநேரம் மேற்படி ஆறுபேரின் வெற்றிடங்களுக்கு விரைவில் புதியவர்கள் அமர்த்தப்படுவார்கள் என கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget