Ads (728x90)

யாழ்ப்­பாண குடா­நாட்­டின் கரை­யோ­ரப் பிர­தே­சங்க­ ளில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் அக­ழும் பகுதி களை அரச வான் படையி­னர் நேற்று முன்தினம் உலங்­கு­வா­னூர்­தியில் சென்று வானி­லி­ருந் த­வாறே பார்­வை­யிட்­ட னர். அந்த இடங்­களை அவர்­கள் வானி­லி­ருந்­த வாறே ஒளிப்­ப­டங்­க­ளும் எடுத்­த­­னர்.
யாழ்ப்­பாண குடா­நாட்­டின் வான் பரப்­பில் உலங்­கு­வா னூர்தி நேற்று முன்தினம் வட்­ட­மிட் டது. அரி­யாலை, பாசை யூர், ஊர்­கா­வற்­றுறை, வட ம­ராட்சி கிழக்கு போன்ற பிர­தே­சங்­கள் உலங்­கு­வா னூர்தி ஊடாக கண்­கா­ணிக்­கப்­பட்­டன.
அந்­தப் பிர­தே­சங்­களை அரச வான் படை­யி­னர் ஒளிப்­ப­ட­மும் எடுத்­துக் கொண்­ட­னர்.‘‘நாட்­டின் பல பாகங்­க­ளி லும் காடு­கள், கனி­ய­வள பிர­தே­சங்­கள் போன்­ற­வற்றை அரச வான் படை­யி­னர் மாதம் ஒரு­த­டவை உலங்­கு­வா­னூர்­தி­யில் சென்று பார்­வை­யி­டு­கின்­ற­னர். அவற்றை ஒளிப்­ப­டம் எடுத்து வரு­கின்­ற­னர்” என்று வான் படைத் தலை­மை­ய­கம் தெரி­வித்­தது.
சட்­ட­வி­ரோ­த­மாக மணல் அகழ்வு இன்­னும் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது. வட­ம­ராட்சி கிழக்­கில் சட்­ட­வி­ரோத மணல் அகழ்­வைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யில் இளை­ஞன் ஒரு­வர் பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டார். அந்த இளை­ஞன் கொலைக் குற்­றச்­சாட்­டில் 2 பொலி­ஸார் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­னர.
இளை­ஞன் கொலை­யைத் தொடர்ந்து வட­ம­ராட்சி துன்­னா­லை­யில் குழப்­ப­நிலை ஏற்­பட்­டது. அத­னைச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திய சிலர் இரவு பக­லாக டிப்­பர்­கள், உழவு இயந்­தி­ரங்­க­ளில் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் ஏற்­றி­னர். குழப்­பம் செய்த குற்­றச்­சாட்­டில் பலர் கைது செய்­யப்­பட்­ட­னர். சட்­ட­வி­ரோ­த­மாக மணல் அக­ழப்­ப­டும் சம்­ப­வங்­கள் வட­ம­ராட்சி கிழக்­கில் மட்­டு­மன்றி யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் ஏனைய இடங்­க­ளி­லும் தொடர்­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget