Ads (728x90)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மைப்­ப­த­வி­யி­லி­ருந்து நான் வில­க­வு­மில்லை, என்னை யாரும் விலக்­க­வு­மில்லை. ஆகவே தற்­போதும் அக்­கட்­சியின் தலை­வ­ராக தான் திகழ்­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜப­க் ஷ தெரி­வித்தார்.
ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று முன்தினம் பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து கடன் சுமையை பேசி பூச்­சாண்டி காண்­பித்து வரு­கி­றது. அதுவும் எமது ஆட்சிக்காலத்தில் பெறப்­பட்ட கட­னையே பேசிக்­கொண்­டி­ருக்­கி­றது. எனினும் எமது ஆட்­சியில் சகல துறை­க­ளிலும் அபி­வி­ரு­த்தி­யையே முன்­னெ­டுத்தோம். அவ் அபி­வி­ருத்­தி­களை சகல இடங்­க­ளிலும் காண­மு­டியும்.
மேலும் அர­சாங்கம் தற்­போது  வரு­மா­ன­வரி சட்­ட­மூலம் கொண்­டு­வ­ரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. எனினும் மக்­க­ளுக்­கான சகல சலு­கை­க­ளையும் துண்­டித்­துள்­ளது. இதற்கு முன்னர் செல்­வந்­தர்­க­ளிடமிருந்து மாத்­திரம் வரு­மான வரி பெறப்­பட்­டது. இனி சகல தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்தும் வரி பெறு­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. 
மலர்­க­ளி­லி­ருந்து தேன் பெறு­வ­துபோல் மக்­க­ளி­ட­மி­ருந்து வரி அற­விடும் கொள்­கை­யி­லேயே நாம் செயற்­பட்டோம். எனினும் அம்­ம­லர்­களை கசக்கி பிழிந்து தேன் பெறு­வ­துபோல் நல்­லாட்சி அர­சாங்கம் மக்­க­ளி­ட­மி­ருந்து வரி அற­வி­டு­வ­தற்கு எதிர்­பார்க்­கி­றது. இது ஐக்­கிய தேசியக் கட்­சியின் கொள்­கை­யாகும்.
மேலும் மக்கள் மத்­தியில் எம்மைப் பற்­றிய வைராக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. அதற்குப் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றது. எனவே எம்­மீ­தான அவ­ம­திப்பு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்­வ­தற்கு எதிர்­பார்­த­்துள்ளேன். 
மேலும் தற்­போது ஊடக சுதந்­திரம் இருப்­ப­தாகக் குறிப்­பி­டு­கின்­றனர். எனினும் ஊட­கங்கள் மீதான கெடு­பி­டிகள் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. அதேபோல் ஏனைய துறை­க­ளிலும் நெருக்­க­டிகள் உள்­ளன. எனவே நாட்டில் தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் செயற்­பா­டு­களில் மாற்றம் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அம்­மாற்­றத்­தினை நாம் ஏற்­ப­டுத்­துவோம். அதன் பின்னர் ஏற்­க­னவே நாம் வழங்­கிய சலு­கை­களை மக்­க­ளுக்கு மீண்டும் வழங்­குவோம்.
மேலும் எமக்­கெ­தி­ராக அர­சாங்கம் முன்­வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இருக்குமாயின் அரசாங்கத்திலுள்ளவர்கள் எமக்கெதிராக நடவடிக்கை எடுக்காது விடமாட்டார்கள். நாம் குற்றம் இழைக்கவும் இல்லை, அதனால் சாட்சியும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget