Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோச­மான தோல்­வி­களை சந்­தித்து வரு­வதால் பொறு­மை­யி­ழந்த ரசிகர்கள் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற போட்­டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்­டி­விட்­டனர். ஆத்­தி­ர­ம­டைந்த ரசி­கர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்­ஸையும் மறித்து 'ஹூ' என கோஷ­மிட்டு தங்கள் எதிர்ப்பை காட்­டி­யுள்­ளனர். 
இதே­வேளை இலங்கை வீரர்­க­ளுக்கு போட்­டியின் இடை­வே­ளையின் போது வழங்கப்­படும் இனிப்பு பிஸ்­கட்டை தடை செய்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந்­தி­ய –­ இ­லங்கை அணிகள் மோதிய முத­லா­வது ஒருநாள் போட்டி தம்­புள்­ளையில் நேற்று முன்­தினம் பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெற்­றது. 
இதில் இந்­திய அணி 9 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது. 
ஏற்­க­னவே, டெஸ்ட் போட்­டிகளில் இலங்கை அணி மோச­மான தோல்வி அடைந்­ததால் கோபத்தில் இருந்த ரசி­கர்கள், ஒருநாள் போட்­டி­யிலும் இலங்கை அணி மண்ணைக் கௌவி­யதால், ஆத்­தி­ரத்தின் உச்­சிக்கே சென்­றனர். 
போட்டி முடிந்­ததும் இலங்கை அணி வீரர்கள் சென்ற சொகுசு பேருந்தை, ரசி­கர்கள் சுமார்  50 இற்கும் மேற்­பட்டோர் மறித்து நின்­றனர். 
இதை­ய­டுத்து, பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து இலங்கை அணி வீரர்­களை பத்­தி­ர­மாக அழைத்­துச்­சென்­றனர்.  
இச்­சம்­ப­வத்தால் அங்கு சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
இதே­வேளை இலங்கை அணி வீரர்­களின் உடற்­த­கு­தியை கருத்தில் கொண்டு வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்­கட்­டிற்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
மைதா­னத்தில் இருக்கும் வீரர்கள் அறைக்கு அடிக்­கடி தேநீர், கோப்பி, குளிர்­பா­னத்­துடன் பிஸ்கட் சேர்த்து வழங்­கப்­படும். 
தற்­போது இலங்கை கிரிக்கெட் நிறு­வனம் வீரர்­களின் உடற்­த­குதி மீது அதிக அக்­கறை எடுத்து வரு­வதால் இலங்கை வீரர்கள் அறையில் இனிப்பு பிஸ்­கட்­டிற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படுகிறது. இனிப்பு பிஸ்கட்டில் புரோட்டீன் சத்து அதிகம் இருப்பதால் இந்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget