Ads (728x90)

முன்னாள் மத்­திய வங்­கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ரனை ஆணைக்குழு­வுக்கு அழைக்க தீர்­ம­ானிக்­கப்பட்­டுள்ள நிலையில் நாளை 19ஆம் திகதி அவரை பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும்  ஜனாதி­பதி ஆணைக்குழு­வுக்கு வரு­மாறு  அறி­வித்தல் அனுப்­பப்பட்­டுள்­ளது. இந் நிலையில் குறித்த விவ­காரம் தொடர்பில் நாளை அர்ஜுன மகேந்­திரன் ஆணைக்குழு முன்­னி­லையில் ஆஜ­ராவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த திங்­கட்கிழமை பிணைமுறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி ஆணைக்குழுவில், பதில்  சொலி­சிட்டர் ஜெனரல் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, அர்ஜுன மகேந்­தி­ர­னையும் அர்ஜுன் அலோ­ஸி­ய­ஸையும் ஆணைக்குழுவில் ஆஜர் செய்யும் வரை மக்கள் எதிர்­பார்த்­தி­ருப்­ப­தாக கூறி­யி­ருந்தார்.

 அதன்­பின்னர் இடம்­பெற்ற சட்ட வாதங்­களின் பின்னர் அர்ஜுன் அலோஸியஸ் தான் சாட்­சியம் வழங்க விரும்­ப­வில்லை என அறி­வித்­தி­ருந்தார்.  இந் நிலையில் தற்­போது அர்ஜுன மகேந்­தி­ரனை ஆணைக்குழு­வுக்கு அழைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்பட்­டுள்ள நிலையில் அவர் சாட்­சி­ய­ம­ளிப்­பாரா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

 அர்ஜுன் மகேந்­திரன் ஆணைக்குழுவின்  அறி­வித்தல்  பிர­காரம் ஆஜ­ரா­காமல் இருந்தால் ஆணைக்குழு தமக்­குள்ள அதி­கா­ரத்தின் பிர­காரம் செயற்­படும் என ஆணைக்குழு தக­வல்கள் தெரி­விக்­கின்­ றன.

எவ்­வா­றா­யினும், 'பர்ப்பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் உரி­மை­யாளர் அர்ஜுன் அலோ­ஸியஸ் நேர­டி­யாக தான் அறிந்­த­வற்றை சாட்­சி­ய­மாக வழங்க வேண்டும். இதுவே எமது அபிப்­பி­ராயம். எனினும் அர்ஜுன் அலோ­ஸியஸ் அவை தொடர்பில் கண்­டிப்­பாக சாட்­சியம் அளிக்க வேண்டும் என நாம் அவரை கட்­டா­யப்­ப­டுத்த முடி­யாது.

அவர் சாட்­சியம் அளிக்க மறுத்­தாலோ அல்­லது விருப்­ப­மின்­மையை வெளி­ப்ப­டுத்­தி­னாலோ ஆணைக்குழு­வா­னது தான் சேக­ரித்­துள்ள சாட்­சி­யங்­களின்படி அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்லும் என பிணைமுறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக் குழு கடந்த வாரம்  தீர்ப்பு வழங்­கி­யது. இந்த தீர்ப்பை முன்­னி­றுத்தி அர்ஜுன் மகேந்­தி­ரனும் செயற்­ப­டலாம் என  நம்­பப்­படும் நிலையில் அவ்­வாறு இடம்­பெற்றால் அது ஆணைக்குழு விசா­ர­ணைக்கு மேலும் தடங்­கல்­களை ஏற்­ப­டுத்தும் என அவ­த­ானிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

எனினும் விரும்­பினால் சாட்­சியம் வழங்­கலாம் என்ற ஆணைக் குழுவின் தீர்ப்­பா­னது  முற்­றிலும் தவ­றா­னது என பதில் சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா சுட்­டிக்­காட்டும்   நிலையில் ஆணைக்குழுவின் குறித்த தீர்ப்புக்கு எதிராக சட்ட மா அதிபருடன் உடனடியாக கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget