Ads (728x90)

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து ஆராய்வதற்காகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனை நடத்துவதற்காகவும் ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வினவியபோதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணா திலக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

20 ஆவது திருத்தச் சட்டம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் 20 ஆவது திருத்தச் சட்டம் குறித்த தீர்ப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே இன்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் இடம்பெறுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறும் என்றார்

Post a Comment

Recent News

Recent Posts Widget