Ads (728x90)

தென்­னிந்­தியத் திரைப்­பட இயக்­கு­நர் பார­தி­ராஜா கிளி­நொச்­சிக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டார். கிளி­நொச்சி தர்­ம­பு­ரம் பகு­தி­யில் தனி­யார் நிறு­வ­னம் ஒன்­றில் இல­வச கண­னிக் கற்­கை­நெறி இடம்­பெற்­றது.

குறித்த கற்­கை­நெ­றியை பூர்த்தி செய்த மாண­வர்­க­ளுக்­குச் சான்­றி­தழ் வழங்­கும் நிகழ்வு நேற்­றுப் பிற்­ப­கல் 2 மணி­ய­ள­வில் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­னர் த.குரு­கு­ல­ ராஜா தலை­மை­யில் இடம்­பெற்­றது.

அதில் விருந்­தி­ன­ராக பார­தி­ராஜா கலந்­து­கொண்­டார். அவ­ரு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ. சேனா­தி­ரா­சா­வும் கலந்து கொண்­டி­ருந்­தார். அவர்­கள் உரை­யாற்­றி­யி­ருந்­த­னர்.

மாண­வர்­க­ளின் கலை­நி­கழ்­வு­க­ளைத் தொடர்ந்து பயிற்­சியை முழுமை செய்த 130 மாண­வர்­க­ளுக்­குச் சான்­றி­தழ்கள் வழங்­கப்­பட்­டன. சான்­றி­தழ்­களை பார­தி­ராஜா வழங்­கி­னார். இந்த நிகழ்­வில் மாண­வர்­கள், பெற்­றோர் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget