
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணத்தில் கடனற்ற விவசாயிகளை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாகும். இதற்கான சிறப்பு செயற்திட்டமாக விவசாயம் மற்றும் கால்நடையுடன் தொடர்புடைய சங்கங்கள், திணைக்களங்கள், சபைகளில் உள்ள அனைத்து பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். இதன்போது விவசாயிகளின் பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி கலந்துரையாடப்படும்.
கூட்டத்துக்கு வருகைதரும் உத்தியோகத்தர்கள் தமது பிரதேசங்களில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை எழுத்து மூலம் தெரியப்படுத்தப்படுத்த வேண்டும். இங்கு முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகள் வழங்கப்படும்.
எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட் கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் திரு நெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும்,3ஆம் திகதி செவ் வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓ ட்டு சுட்டான் மாவட்ட விவ சாய பயிற்சி நிலையத்திலும், 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலை யத்தி லும் நடைபெறும் , இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் தொடர்ச்சி யாக நடைபெறவுள்ளது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை விவசாயம் சார்ந்த கலந்துரையாடலும், அதன்பின்னர் கால்நடை சார்ந்த கலந்துரையாடலும் நடைபெறும் – என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment