Ads (728x90)

வடக்கு மாகா­ணத்­தில் விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­களை எழுத்­து­மூ­லம் தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்­கான சிறப்பு நிகழ்ச்­சித் திட்­டம் எதிர்­வ­ரும் 30ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­ப­டும். இதன் முதல்­கட்­ட­மாக வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்­டங்­க­ளில் இந்தத் திட்டம் நடை­பெ­றும் என்று மாகாண விவ­சாய அமைச்சின் செயலர் சி.சத்தியசீலன் தெரி­வித்­தார்.

இது­பற்றி அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகா­ணத்­தில் கட­னற்ற விவ­சா­யி­களை உரு­வாக்­கு­வது எமது எதிர்­பார்ப்­பா­கும். இதற்­கான சிறப்பு செயற்­திட்­ட­மாக விவ­சா­யம் மற்­றும் கால்­ந­டை­யு­டன் தொடர்­பு­டைய சங்­கங்­கள், திணைக்­க­ளங்­கள், சபை­க­ளில் உள்ள அனைத்து பிர­தி­நி­தி­க­ளை­யும் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளோம். இதன்­போது விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­கள், தேவை­கள் என்­பன பற்றி கலந்­து­ரை­யா­டப்­ப­டும்.

கூட்டத்துக்கு வரு­கை­த­ரும் உத்­தி­யோ­கத்­தர்­கள் தமது பிர­தே­சங்­க­ளில் உள்ள விவ­சா­யி­க­ளின் பிரச்­சி­னை­களை எழுத்து மூலம் தெரி­யப்­ப­டுத்­தப்­ப­டுத்த வேண்­டும். இங்கு முன்­வைக்­கப்­ப­டும் பிரச்­சி­னை­க­ளுக்கு வெகு­வி­ரை­வில் தீர்­வு­கள் வழங்­கப்­ப­டும்.

எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட் கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் திரு நெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்திலும்,3ஆம் திகதி செவ் வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓ ட்டு சுட்டான் மாவட்ட விவ சாய பயிற்சி நிலையத்திலும், 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளம் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலை யத்தி லும் நடைபெறும் , இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களில் தொடர்ச்சி யாக நடைபெறவுள்ளது.

காலை 9 மணி­ மு­தல் மதி­யம் 2 மணி­வரை விவ­சா­யம் சார்ந்த கலந்­து­ரை­யா­ட­லும், அதன்­பின்­னர் கால்­நடை சார்ந்த கலந்­து­ரை­யா­ட­லும் நடை­பெ­றும் – என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget