
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கமைவாக இந்த யோசனையை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவித்துள்ளதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் அவ்வமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையொன்றிலையே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தற்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த முயற்சியினை கைவிடவேண்டாம் என்பதனையும் அரசாங்கத்திற்கு தெளிவுப்படுத்தியுள்ளோம். அதனடிப்படையில் இருபதாம் அரசியலமைப்பு திருத்தத்தினை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் பட்சத்தில் அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதை போன்று ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியாமல் போகும். இந்நிலையில் அதற்கான மாற்றுத்திட்டமொன்றையும் அரசாங்கம் முன்வைக்கவேண்டும்.
இந்நிலையில் சகல மாகாண முதலமைச்சர்கள் மற்றும் மாகாண ஆளுனர்களின் இணக்கப்பாட்டுடனும் அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்குள் சகல மாகாணசபைகளை கலைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலையும் ஒரே தினத்தில் நடத்த முடியும்.
இவ்வாறு ஒரேதினத்தில் சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் நடத்துவதனால் தேவையற்ற கால தாமதத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன் தனித்தனியாக தேர்தல்களை நடத்துவதால் ஏற்படும் அநாவசிய செலவீனத்தையும் தவிர்க்க முடியும். அத்துடன் பொதுச்சொத்துக்களையும் தேவையற்ற விதத்தில் பாவிப்பதனையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களை கண்காணிப்பதற்கான தேசிய (கபே) அமைப்பு அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது
Post a Comment