
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பார்சன் கிரீன் ரயில் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சுரங்க ரயிலின் ஒரு பெட்டியில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 30 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த வெடிகுண்டு சம்பவத்தில் நேற்று முன்தினம், தோவர் பகுதியில் 18 வயது வாலிபரை கென்ட் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், ஹோன்ஸ்லோவை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்
Post a Comment