மின்சார சபை ஊழியர்கள் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நண்பகல் முதல் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அது தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மின்சார சபை ஊழியர்கள் நீண்ட காலமாக சம்பளப் பிரச்சினையினை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அத்துடன் மின்சார சபையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்வதற்கு மின் கட்டணத்தில் அதிகரிப்பு செய்யுமாறு மின்சார சபையின் நிர்வாகத்தினால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் மின் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யக்கூடாது. ஏனெனில் மின்சார சபையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளினாலேயே மின் கட்டணத்தில் ஐம்பது சதவீத சுமையினை பாவனையாளர்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஆகவே அச்சபைக்குள் நிலவும் மோசடிகளை தடுப்பதுடன் மின் கட்டணத்தில் அதிகரிப்புச் செய்யக்கூடாது.
மேற்சொன்ன பிரதான கோரிக்கைகள் உட்பட இன்னும் சில கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம்.
எனினும் வைத்தியசாலை உட்பட முக்கிய இடங்களில் பணியில் ஈடுபட்டுள்ளோம். இருந்த போதிலும் அரசாங்கத்திற்கு நாம் நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் வரை அவகாசம் வழங்குகிறோம். அக்காலக்கெடுவில் எமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு முன்வைக்கப்பட வேண்டும். அல்லாது போனால் நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் பரந்துபட்ட தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்கவுள்ளோம்.
அப்போராட்டத்திற்கு எதிராக அரசாங்கம் எவ்வகையான அழுத்தத்தை பிரயோகித்தாலும் எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிட்டும் வரையில் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Post a Comment