Ads (728x90)

தற்­கா­லிக மற்றும் உடன்­ப­டிக்கை அடிப்­ப­டையில் மின்­சார சபையில் பணி­யாற்றும் சகல அத்­தி­ய­ாவ­சிய, அவ­சர மின்­சார சேவை வழங்கும் ஊழி­யர்­களும் இன்று காலை 8.30 மணிக்கு முன்னர் கட­மைக்குத் திரும்ப வேண்டும்.  அல்­லாத­வி­டத்து குறித்த ஊழி­யர்கள் தமது பணி­யி­லி­ருந்து விலகிச் சென்­ற­தாகக் கருதி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என மின்­சக்தி மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி வள அமைச்சு அறி­வித்­துள்­ளது. அவ்­வ­மைச்சு வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கை­யி­லேயே குறித்து விடயம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
எனினும் தாம் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­க­ளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரையில் முன்­னெ­டுத்­துள்ள தொழிற்­சங்கப் போராட்­டத்தைக் கைவிடப்போவ­தில்லை என  ஒன்­றி­ணைந்த தொழிற்­சங்க முன்­னணி தெரிவித் ­துள்­ளது. மேலும் கடந்த புதன்கிழமை முதல் தொழிற்­சங்கப் போராட்டத்தில் ஈடு­பட்­டுள்­ள­போதும் வைத்­தியசாலை உள்­ளிட்ட  முக்­கிய இடங்­களில் சேவை இடம்­பெ­று­கி­றது. 
எனினும் இன்று நண்­ப­க­லுக்கு முன்னர் உரிய தீர்­வின்றேல் நண்­ப­க­லுக்குப் பின்னர் பரந்துபட்ட போராட்­டத்தில் ஈடுபடவுள் ளதாகவும் ஒன்றிணைந்த தொழிற்சங்க முன் னணியின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget