Ads (728x90)

யாழ்.பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்க இணைச் செய­லாளர் எஸ்.கலா­ரா­ஜுக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. யாழ்.பல்­க­லைக்­க­ழக வளா­கத்­தி­லேயே நேற்­றை­ய­தினம் இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. 
குறித்த சம்­பவம் தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
யாழ்.பல்­க­லைக்­க­ழகப் பெண் ஊழியர் ஒரு­வ­ருடன் இரு நிர்­வாக அதி­கா­ரிகள் தகாத முறையில் செயற்­பட்­டுள்­ளமை குறித்து குறித்த  நிர்­வாக அதி­கா­ரிகள் மீது உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்  என  வலி­யு­றுத்தி கடந்த வெள்­ளிக்­கி­ழமை பல்­க­லைக்­க­ழக ஊழி­யர்கள் ஆரம்­பித்த பணிப்­ப­கிஷ்­க­ரிப்புப் போராட்டம் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் இடம்­பெற்­றுள்­ளது. 
இந்­நி­லையில் நேற்­றை­ய­தினம் தமது போராட்டம் தொடர்­பான நியா­யப்­பா­டு­களை பல்­க­லைக்­க­ழ­கத்தின் அனைத்துத் துறை­க­ளுக்கும் யாழ்.பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்­கத்­தினர் தெளி­வு­ப­டுத்தி வந்­த­நி­லையில் நேற்று முற்­பகல் 11.30 மணி­ய­ளவில் பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்­கத்தின் இணைச் செய­லாளர் எஸ்.கலாராஜ் குறித்த சம்­பவம் தொடர்­பிலும், தமது போராட்­டத்தின் நியா­யப்­பா­டுகள் தொடர்பில்  ஊட­க­வி­ய­லா­ள­ருக்கு தெளி­வு­ப­டுத்­திய வேளையில் அங்கு நின்­றி­ருந்த கட்­சி­யொன்றை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தொழிற்­சங்­க­மொன்றின் தலைவர், இணைச் செய­லா­ளரை நோக்கி “கண்ணீர் அஞ்­சலிப் பிர­சுரம் அடிக்க வேண்டி வரும்” என கொலை அச்­சு­றுத்தல் விடுத்­துள்ளார். தனக்கு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­மையை யாழ். பல்­க­லைக்­க­ழக ஊழியர் சங்­கத்தின் இணைச் செய­லாளர் உறுதி செய்­துள்ளார்.
மேலும் இவ்­வா­றான அச்­சு­றுத்­தல்­க­ளுக்குத் தான் அஞ்சப் போதில்லை என்றும் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget