Ads (728x90)

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல­வரம் மற்றும் அதன் போது கொலை செய்­யப்பட்ட 27 கைதிகள் தொ­டர்­பிலான குற்றப் புல­னாய்வுப் பிரிவு சிறப்பு விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்ள நிலையில் அந்த விசா­ர­ணை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்­தப்­பட்­டுள்­ளது. 
அதன்­படி குறித்த  சம்­பவம் தொடர்பில் அப்போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­தபாய ராஜ­பக் ஷ, அப்­போ­தைய இரா­ணுவ தள­பதி ஜெனரல் ஜகத் ஜய­சூ­ரிய, அப்­போ­தைய மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்க மற்றும் உளவுத் துறை தொடர்­பி­லான முன்னாள் பிர­தானி கபில ஹெந்­த­வித்­தா­ரன உள்­ளிட்­டோ­ரிடம் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தீர்­மா­னித்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன.
இது தொடர்பில் சிறைச்­சாலை அதி­கா­ரிகள், கைதிகள் பல­ரி­டமும் பொலிஸ் அதி­கா­ரிகள் பல­ரி­டமும் ஏற்­க­னவே குற்றப் புல­னா­ய்வுப் பிரி­வினர் ஆரம்­ப­க்கட்ட விசா­ர­ணையில் வாக்குமூலங்களை பெற்­றுக்­கொண்­டுள்ள நிலை­யி­லேயே கோத்­தபாய உள்­ளிட்­டோரை விசா­ரணை செய்ய தீர்­ம­னித்­துள்­ளனர். இந் நிலையில் கோத்­தபாய உள்­ளிட்டோர் எதிர்­வரும் மூன்று வாரங்­க­ளுக்குள் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அதற்­கான அறி­வித்­தல்கள் அவர்­க­ளுக்கு மிக விரைவில் அனுப்பப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் சுட்­டிக்­காட்­டின.
 கடந்த 2012 ஆம் ஆண்டு இரவு வெலிக்­கடை  விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லையில் கல­வரம் ஒன்று ஏற்­பட்­டது. இதனை பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் தலை­யீடு செய்து கட்­டுப்­ப­ாட­்டுக்குள் கொண்டு­வரும் போது, இர­வோ­டி­ர­வாக இரா­ணு­வத்தின் சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு சிறைச்­சா­லைக்குள் நுழைந்து சிறையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தது. இதன் போது 27 கைதிகள் சுட்டுக் கொல்­லப்பட்­டனர்.
இதில் விளக்­க­ம­றி­யலில் இருந்த கோட்டே ரஜ­மஹா விஹா­ரையில் இருந்த  6 ஆம் புவ­னே­க­பா­குவின் (சபுமல் குமா­ரயா) அரச வாளினை திருடச் சென்று அங்­கி­ருந்த தேரர்கள் இரு­வரை கொலைச் செய்த சந்­தேக நபர்­களும் அடங்­குவர். இந்த வெலிக்­கடை கல­வரம் குறித்த சம்­ப­வத்தின் சந்­தேக நபர்கள் உண்­மையை வெளிப்­ப­டுத்­தாமல் இருப்­ப­தற்­காக ஏற்­ப­டுத்­தப்பட்­ட­தாக சந்தேகம் தெரிவிக்கப்படும் நிலை­யி­லேயே தற்­போது சி.ஐ.டி. அதன் உண்மைத் தன்­மையை வெளிப்­ப­டுத்த விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.
அண்­மையில் இந்த வெலிக்­கடை சிறைச்­சாலை கல­வ­ரத்தின் பிர­தான சாட்­சி­யா­ள­ராக கரு­தப்­படும் சுரேஷ் நந்­தி­மாலின் மொரட்­டுவை வீட்டின் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் முன்­னெ­டுக்­கப்பட்­டி­ருந்­த­துடன், அவர் சேவை­யாற்றும் ரயில்வே திணை
க்­க­ளத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலும் அவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget