Ads (728x90)

மாகாண சபை­க­ளின் தேர்­தலை ஒத்­தி­வைப்­ப­தற்­காக, அரசு தூசு தட்டி எடுத்து வந்த மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவு நாடா­ளு­மன்­றில் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மை­யு­டன் நேற்று நிறை­வே­றியது. காலை விவா­தத்­துக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்ட சட்­ட­வ­ரைவு மீது குழப்­பங்­க­ளுக்கு மத்­தி­யில் பகல் விவா­தம் நடை­பெற்று, இரவு வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டது.

சட்­ட­வ­ரை­வுக்கு அர­சு­டன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மக்­கள் விடு­தலை முன்­னணி என்­பன ஆத­ரவு வழங்­கின. மகிந்த அணி எதிர்த்து வாக்­க­ளித்­தது. 157 வாக்­கு­கள் ஆத­ர­வா­க­வும், 37 வாக்­கு­கள் எதி­ரா­க­வும் கிடைத்­தன.
மாகாண சபை­க­ளின் தேர்­தலை ஒத்­தி­வைக்­கும் நோக்­கு­டன் அரசு கொண்டு வந்த 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவு உயர் நீதி­மன்ற வியாக்­கி­யா­னத்­தை­ய­டுத்து கைவி­டப்­பட்­டது.

உட­ன­டி­யாக மாற்று ஏற்­பாட்­டைச் செய்த அரசு, ஏற்­க­னவே நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்­கப்­பட்டு கிடப்­பி­லி­ருந்த மாகாண சபை­கள் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவை தூசி தட்டி, நேற்­றுக் காலை இரண்­டா­வது வாசிப்­புக்கு எடுத்­துக் கொண்­டது. மகிந்த அணி­யின் கூச்­சல் குழப்­பங்­க­ளுக்கு மத்­தி­யி­லேயே விவா­தம் நடை­பெற்­றது. சட்­ட­வ­ரைவு இரண்­டாம் வாசிப்பு முடி­வ­டைந்து வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட்­டது. ஆத­ர­வாக 157 வாக்­கு­க­ளும், எதி­ராக 37 வாக்­கு­க­ளும் கிடைத்­தது. மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் சட்­ட­வ­ரைவு நிறை­வேற்­றப்­பட்­டது.

இத­னால், இந்த மாத இறு­தி­யில் ஆயுள் காலம் முடி­வ­டை­யும் மாகாண சபை­க­ளுக்கு டிசெம்­பர் 9ஆம் திகதி தேர்­தல் நடத்த முடி­யாது. நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நிறை­வேற்­றப்­பட்ட சட்­ட­வ­ரை­வில் சபா­நா­ய­கர் கையெ­ழுத்­திட்­ட­தும், அது எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழு­வுக்கு அனுப்­பப்­ப­டும்.

எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழு­வின் பணி­கள் முடி­வ­டைந்த பின்­னர், எல்லை நிர்­ணய அறிக்கை, மாகாண சபை­கள் அமைச்­ச­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டும். அவர் அதனை வர்த்­த­மா­னி­யில் பிர­சு­ரித்த பின்­னரே, தேர்­தல் நடத்த முடி­யும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget