Ads (728x90)

மாகாண சபை தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவை அரசு சபை­யில் சமர்­பித்­த­துமே, மகிந்த அணி­யி­னர் நாடா­ளு­மன்­றில் பெரும் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­னர். நாடா­ளு­மன்­றத்தை நடத்த விடா­மல் முடக்­கும் நோக்­கு­டன் அவர்­கள் பிரச்­சி­னை­களை எழுப்­பி­னர். சட்­ட­வ­ரை­வின் திருத்­தங்­கள் மேற்­பார்­வைக் குழு­வுக்கு அனுப்பி வைக்­க­வில்லை, மாகாண சபை­க­ளின் ஒப்­பு­தல் பெறப்­ப­ட­வில்லை என்று குற்­றச்­சாட்டுக்­களை முன்­வைத்­த­னர்.

சபைக்கு நடுவே வந்து பேரொலி எழுப்­பி­னர். தலைமை அமைச்சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்­டமா அதி­ப­ரு­ட­னான பேச்­சுக்­க­ளைத் தொடர்ந்தே சபை நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் சுமு­க­மாக ஆரம்­ப­மா­கின. 20ஆவது திருத்­தச் சட்­ட­வ­ரைவை அரசு கைவிட்­டது. தேர்­தலை ஒத்­தி­வைக்­கும் நோக்­கு­டன் மாற்று ஏற்­பா­டாக மாகாண சபைத் தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவை நாடா­ளு­மன்­றுக்கு அரசு கொண்டு வந்­தது.

இதனை நாடா­ளு­மன்­றில் நேற்று எடுத்­துக் கொள்­வது தொடர்­பில் ஆரா­யப்­பட்ட கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தி­லேயே மகிந்த அணி கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டி­ருந்­தது. நாடா­ளு­மன்­றில் சட்­ட­வ­ரைவு சமர்­பிக்­கப்­பட்­ட­துமே மகிந்த அணி­யி­னர் சன்­ன­தம் கொள்­ளத் தொடங்­கி­னர்.

மாகாண சபை­கள் அமைச்­சர் பைசர் முஸ்­தப்பா, சட்­ட­வ­ரைவை சபை­யில் முன்­வைத்து பேச ஆரம்­பிக்க எழு­வ­தற்கு முன்­னரே மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஸ் குண­வர்த்­தன குறுக்­கிட்­டார். “அர­ச­மைப்­பின் 84ஆவது சரத்­தின் பிர­கா­ரம் மாகாண சபை­யு­டன் தொடர்­பான சட்­ட­வ­ரைவை மாகாண சபை­க­ளுக்கு அனுப்­பி­வைத்து மாகா­ணங்­க­ளின் ஒப்­பு­தல் பெற­வேண்­டும். 20ஆவது சட்­ட­வ­ரை­வுக்கு மாகாண சபை­க­ளின் ஒப்­பு­தல் பெறப்­பட்­டது.

இந்­தச் சட்­ட­வ­ரைவு மாகாண சபை­க­ளின் ஒப்­பு­த­லைப் பெற­வில்லை. ஏன் மாகாண சபை­க­ளுக்கு அனுப்­ப­வில்லை?” என்று தினேஸ் குண­வர்த்­தன கேள்வி எழுப்­பி­னார். மாகாண சபை­க­ளின் அனு­மதி பெற வேண்­டி­ய­தில்லை என்று சபை முதல்­வர் லக்ஸ்­மன் கிரி­யல்ல மற்­றும் சபா­நா­ய­கர் கரு ஜய­சூ­ரிய ஆகி­யோர் கூறி­னார்.

மகிந்த அணி­யி­னர் பேரொலி எழுப்­பத் தொடங்­கி­னர். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வன்ச, “சட்­ட­வ­ரை­வின் சரத்­துக்­க­ளை­விட திருத்­தங்­கள் அதி­கம். மறை­மு­க­மா­கத் திருத்­தங்­கள் கொண்டு வரப்­ப­டும்­போது, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சட்­ட­வ­ரை­வுக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யாது போகும்.

மாகாண சபை­யின் ஒப்­பு­தல் இந்­தச் சட்­ட­வ­ரை­வுக்­குப் பெற்­றுக் கொள்­ளப்­ப­டத் தேவை­யில்லை என்­ப­தற்கு சட்­டமா அதி­ப­ரின் கூற்று உங்­க­ளி­டம் உள்­ளதா?” என்று கேள்வி எழுப்­பி­னார். சப­நா­ய­கர் கரு, அதற்கு ஆம் என்று பதி­ல­ளித்­தார்.

“நாடா­ளு­மன்ற மேற்­பார்­வைக் குழு­வின் தலை­வர் நான். நாம் நாடா­ளு­மன்­றுக்கு அனுப்­பிய சட்­ட­வ­ரைவு தற்­போது சமர்­பிக்­கப்­ப­ட­வில்லை. பல்­வேறு திருத்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. திருத்­தங்­கள் மேற்­பார்­வைக் குழு­வுக்கு வர­வில்லை. இது அநீதி” என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காமினி லொக்­குகே சத்­த­மிட்­டார்.

“காமினி லொக்­குகே தவ­றான கருத்தை முன்­வைத்­துள்­ளார். நானும் மேற்­பார்­வைக் குழு­வின் உறுப்­பி­னர். சட்­ட­வ­ரைவை நிறை­வேற்றி அனுப்­பச் சொன்­ன­வரே அவர்­தான்” என்று போட்­டுக் கொடுத்­தார், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹெக்­டர் அப்­பு­காமி.

“சட்­ட­வ­ரை­வின் திருத்­தங்­களை மேற்­பார்­வைக் குழு­வுக்கு அனுப்ப வேண்­டி­ய­தில்லை. குழுக் கூட்­டத்­தின் போதே திருத்­தங்­கள் முன்­வைக்க வேண்­டும். இதற்­கும் முன்­னர் மேற்­பார்­வைக் குழு­வுக்கு திருத்­தங்­கள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. சம்­பி­ர­தா­யங்­களை மீறி எம்­மால் செயற்­பட முடி­யாது” என்று சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல காட்­ட­மா­கக் கூறி­னார்.
சபை­யில் இதன் பின்­ன­ரும் மீண்­டும் பெரும் கூச்­சல் குழப்­பம் ஏற்­பட்­டது. மகிந்த அணி­யி­ன­ரின் நட­வ­டிக்கை எல்லை மீறி­யது. சூடா­கிய சபா­நா­ய­கர் கரு, விவா­தத்தை நடத்த விடுங்­கள் என்று கடும் தொனி­யில் தெரி­வித்­தார்.
இதன் பின்­னர் அமைச்­சர் பைசர் மீண்­டும் பேச ஆரம்­பித்­தார். மகிந்த அணி­யின் குழப்­பங்­களை கவ­னத்­தி­லெ­டுக்­கா­மல் அவர் தனது உரை­யைத் தொடர்ந்­தார்.

அமைச்­சர் பைச­ரின் உரை­யைத் தொடர்ந்து, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் பேச ஆரம்­பித்­தார். மகிந்த அணி­யி­னர் அனை­வ­ரும் சபைக்கு நடுவே வந்து செங்­கோ­லுக்கு அரு­கா­மை­யில் நின்­ற­னர்.
சபா­நா­ய­க­ருக்கு முன்னே நின்று விவா­தத்தை உடன் நிறுத்­துங்­கள், இது முறை­யற்ற செயற்­பாடு என்று அவர்­கள் கூச்­ச­மிட்­ட­னர். இதன்­போது, சுமந்­தி­ர­னைப் பார்த்து, “நீங்­கள் ஆளும் கட்­சி­யு­டன் சென்று அம­ருங்­கள்” என்­றும் அவர்­கள் கூச்­ச­லிட்­ட­னர்.

மகிந்த அணிக்­குச் சவால்­வி­டும் வகை­யில் ஆளும் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் சபை நடுவே வந்­த­னர். சபை­யில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னின் உரை முடிந்­த­தும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சட்­டமா அதி­ப­ரு­டன் நண்­ப­கல் 12 மணிக்­குப் பேசு­வ­தா­கத் தெரி­வித்­தார். இந்­தக் கூட்­டத்­தில் கட்­சித் தலை­வர்­க­ளும் கலந்து கொள்ள முடி­யும் என்று தெரி­வித்­தார். இத­னை­ய­டுத்தே மகிந்த அணி­யி­னர் அடங்­கி­னர்.

சட்­டமா அதி­ப­ரும் பேச்சு நடத்­தும் நோக்­கில் 12 மணி வரை சபை நட­வ­டிக்­கை­களை ஒத்­தி­வைப்­ப­தாக சபா­நா­ய­கர் அறி­வித்­தார். 11.20 மணிக்கு சபை நட­வ­டிக்­கை­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டன.  இதன் பின்­னர் மதி­யம் 1.30 மணிக்கே சபை நட­வ­டிக்­கை­கள் ஆரம்­ப­மா­கின. “திருத்­தங்­களை மேற்­பார்­வைக் குழு­வுக்கு அனுப்ப வேண்­டி­ய­தில்லை. மாகாண தேர்­தல் திருத்­தச் சட்­ட­வ­ரைவை மாகாண சபை­க­ளுக்கு அனுப்­பி­வைக்க வேண்­டி­ய­தில்லை”
என்ற சட்­டமா அதி­பர் எழுத்­து­மூ­லம் அறி­வித்­தலை சபா­நா­ய­கர் வாசித்­துக் காட்­டிய பின்­னர் விவா­தம் சுமு­க­மாக முன்­னெ­டுத்­துச் செல்­லப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget