இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதனால் குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்க வேண்டியேற்பட்டதாக குக்குலேகங்க நீர் மின் திட்டத்தின் பொறியியல் திட்டமிடல் பிரிவு தெரிவித்தது.
இத் திட்டத்தின் இரு வான் கதவுகள் கடந்த இரு வாரங்களில் இரு முறை திறக் கப்பட்டு மீண்டும் மூடப்பட்டன.
இதன் காரணமாக அந்த நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment