இரத்தினபுரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் எஹலியகொடையில் மண்சரிவு அபாயமுள்ள பிரதேசங்கள் என கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த பகுதிகளில் இருந்து சுமார் 150 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக எகஹலியகொடை பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
மேற்படி 150 குடும்பங்களைச் சேர்ந்த 577 பேர் இடம்பெயர்ந்துள்ளதுடன், இவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாதிங்கொட - 40 பேர், அஸ்கங்குல - 28 பேர், எஹலியகொட தோட்டம் - 48 பேர், விலே
கொட - 54 பேர், தொரணகொட - 50 பேர், பெல்பிட்டிய – - 146 பேர், போபெத்த - 128 பேர், கலருவாவ- 18 பேர், எருபொல–- 65 பேர் என தங்கியுள்ளனர். இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு எஹலியகொட பிரதேச செயலகத்தின் மூலமும் நலன்புரி அமைப்புக்களூடாகவும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்
ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ உதவி அதிகாரி ஜீ.பி.எஸ். அபேகுணவர்த்தன தெரிவித்தார்.
Post a Comment