Ads (728x90)

நட்சத்திர காதல் ஜோடிகளான நாக சைதன்யா, சமந்தா இருவரது திருமணம் அடுத்த மாதம் 6ம் தேதி கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்தத் திருமணத்திற்கு இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. இவர்களது கல்யாணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் அனைவரும் அக்டோபர் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நான்கு நாட்கள் கோவாவில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அக்டோபர் 6ம் தேதி இந்து முறைப்படியும், அக்டோபர் 7ம் தேதி கிறித்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின் ஐதராபாத்தில் நடக்க உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத்தான் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட உள்ளது. திருமண சடங்குகள் இந்து, கிறித்துவ முறைப்படி நடக்க உள்ளதால், அதில் உறவினர்கள் அனைவரும் பங்கு பெறும் விதத்தில்தான் திருமணத்திற்கு 175 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

தெலுங்குத் திரையுலகிலிருந்து சிரஞ்சீவியின் மகன் ராம்சரண், அவரது மனைவி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. தமிழ்த் திரையுலகத்தில் சமந்தா யாரை அழைத்துள்ளார் என்பது இன்னும் தெரியவில்லை.

தமிழில் சமந்தா தற்போது நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழ்த் திரையுலகத்திற்கென தனியாக சென்னையில் திருமண வரவேற்பு ஒன்றை நடத்தும் ஐடியா அவருக்கு இல்லை என்கிறார்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget