Ads (728x90)

பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்த  புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அருந்­திக்க பெர்­னா ண்டோ பதவி நீக்­கப்­பட்­ட­மை­யா­னது  ஜனா­தி­ப­தியின் அதி­ரடி முடி­வாகும். இது­வரை  தாம­தித்து வந்த விடயம் தற்­போது இடம்­பெற்­றுள்­ளது என்று அமைச்­ச­ரவை பேச்­சாளர் அமைச்சர் ராஜித சேனா­ரட்ன   தெரி­வித்தார். 
அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டு­க­ருத்து வெளியி­டு­கை­யி­லேயே இணை அமைச்­ச­ரவைப் பேச்­சாளர்  இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 
அருந்­திக்க பெர்­னாண்டோ பிரதி அமைச்சர் பத­வி­யிலி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்பில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை. அவர்  விட­யத் தில்  ஜனா­தி­பதி  அதி­ரடி  நட­வ­டிக்­கையை எடுத்­ துள்ளார் என்று கூறலாம் என்றார். செய்­தி­யாளர் சந்­திப்பில்  அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர குறிப்­பி­ டு­கையில், 
அருந்­திக்க பெர்­னாண்டோ  தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்தின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறும்­ வ­கையில்  கருத்து வெளி­யிட்டு வந்தார்.  எனவே  அவ­ருக்கு எதி­ராக  இந்த நட­வ­டிக்கை எடுக்­கப் ­பட்­டது. அவ­ருக்கு இது­தொ­டர்பில் நாம் பல தடவை எடுத்­துக்­கூ­றினோம். ஆனால் அவர் தொடர்ந்து இந்த அசௌ­க­ரி­ய­மான செயற்­பாட் டில் ஈடு­பட்டு வந்தார். எனவே தற்­போது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. மற்­ற­படி அவர் கட்­சியில் இருந்து தொடர்ந்து செயற்­பா­டு­களை மேற்­கொள்வார். அவர் இன்­று­காலை (நேற்று) ஜனா­தி­ப­தியை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார். 
கேள்வி: செவ்­வாய்க்­கி­ழமை இரவு நடை­பெற்ற  சுதந்­தி­ரக்­கட்­சியின் கூட்­டத்தில் என்ன பேசப்­பட்­டது. 
பதில்: இதில்  பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப் பட்டன. கட்சியை  கிராமமட்டத்தில் கட்டியெழு ப்புவது தொடர்பாக ஆராயப்பட்டது.குழுக்களும் நியமிக்கப்பட்டன என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget