Ads (728x90)

இலங்கை மீது சர்­வ­தே­சத்தின் அழுத்தம் வலு வ­டைந்­து­கொண்டு வரு­கி­றது. அதன் பின்­ன­ணியில் புலம்பெயர் அமைப்­புகள் செயற்பட்டு இலங்கை இரா­ணு­வத்­திற்கு எதி­ரான பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றன. மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை ஆணை­யா­ளர் அல் ஹுசைனின் அழுத்­தத்­திற்­கி­ணங்­கவே எதிர்­வரும் 21ஆம் திகதி, வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். 
கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­யலார் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜெய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக பிரேசில் நாட்டில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. குறித்த வழங்­கினை அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தாக்கல் செய்­துள்­ளன. மேலும் அவ்­வா­றான வழக்கை தாக்கல் செய்­வ­தற்கு இலத்தின் அமெ­ரிக்க நாடு­க­ளான ஆஜன்­டினா,கொலம்­பியா,பேரு ஆகி­ய­னவும் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றன. இவ்­வா­றான நிலையில் வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை எதிர்­வரும் 21 ஆம் திகதி விவ­ாதத்­திற்கு எடுப்­ப­தாக பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலில் உள்­ள­டக்­க­ப்பட்­டுள்­ளது. 
குறித்த சட்­ட­மூலம் ஜூலை மாதம் 5ஆம் திகதி விவா­தத்­திற்கு எடுப்­ப­தற்கு இருந்­தது. எனினும் அப்­போது நாட்டில் எழுந்த எதிர்ப்­பினால் அது பிற்­போ­டப்­பட்­டி­ருந்­தது. இருந்­தே­பா­திலும் அதனை  எதிர்­வரும் 21 ஆம் திகதி விவாத்­திற்கு எடுத்து குறித்த சட்­ட­மூ­லத்தை நிறை­வேற்றி சர்­வ­தேச சம­வா­யத்தை இலங்­கையில் அமுல்­ப­டுத்­த­வ­தற்கு எதிர்­பார்க்­க­பட்­டுள்­ளது.
சர்­வ­தேச சம­வாயம் அமெ­ரிக்கா, கனடா, பிரித்­தா­னியா, அவுஸ்­தி­ரே­லியா உள்­ளிட்ட எந்த நாடு­க­ளிலும் அமுலில் இல்லை. மேலும் குறித்த சம­வா­யத்தை இலங்­கையில் அமுல்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் தற்­போ­தே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. ஏனெனில் காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான அலு­வ­லக சட்­ட­மூலம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. அதுவும் மிகவும் பயங்­க­ர­மான சட்­ட­மாகும்.
எனவே பிரே­சிலில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கில் பயன்­ப­டுத்த ஏற்­பு­டைய சாட்­சி­களை தயார் பண்ணும் விட­யங்கள் 21 ஆம் திகதி விவாத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்ள சட்­ட­மூ­லத்தில் உள்­ளக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த சட்­ட­மூலம் சர்­வ­தேச அழுத்தத்தின் பேரி­லேயே எதிர்­வரும் 21ஆம் திகதி பாரா­ளு­மன்றில் விவா­தத்­திற்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.
மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது அமர்வில் மனித உரி­மைகள் பேர­வையின் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்­கையை இலக்­கு­வைத்து அறிக்கை வெளி­யிட்டார். அதில் காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான சட்­ட­மூலம் தொடர்பில்  விசேட அவ­தானம் செலுத்­தி­யி­ருந்தார். மேலும் காணா­ம­லாக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான காரி­யா­ல­யத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறும் இலங்­கைக்கு அவர் பணிப்­புரை விடுத்­துள்ளார்.
அதனை அடிப்­ப­டையாக் கொண்டே எதிர்­வரும் 21 ஆம் திகதி வலுக்­கட்­டா­ய­மாக காணா­மல்­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
மேலும் கடந்த காலங்­களில் சர்­வ­தேச நீதி­ப­திகள் இலங்­கைக்கு வரு­வது தொடர்பிலான உரையாடல் நிலவியது. எனினும் 21 ஆம் திகதி பாராளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சட்டமூலத்தின் எட்டாம் உறுப்புரையில் குறித்த குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசாங்கம் அல்லது அவ்வரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் நாடுகளுக்கு குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget