Ads (728x90)

ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் நோக்கில் எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை நியூ யோர்க் செல்­ல­வுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடு­களின் அர­சியல் தலை­வர்­களை  சந்­தித்து பேச்­சு­வார்த்தை  நடத்­த­வுள்ளார்.  
ஐக்­கிய நாடுகள் பொதுச் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ கட்ரஸ் இந்­திய பிர­தமர்   நரேந்­திர மோடி  ஜப்பான் பிர­தமர்  சின்­சிரோ அபே சீன ஜனா­தி­பதி  ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர்  ஏஞ்­சலா மேர்கல் கன­டாவின் பிர­தமர் டுருடூ உள்­ளிட்ட அர­சியல் தலை­வர்­களை சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளார். 
ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின்   பக்க சந்­திப்­புக்­க­ளா­கவே அர­சியல் தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான இந்த சந்­திப்­புக்கள் நடை­பெ­று­வுள்­ளன. 
ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசே­னுக்கும் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும்  இடை­யி­லான சந்­திப்­பின்­போது பல்­வேறு  விட­யங்கள் குறித்து ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. 
அதா­வது  இலங்கை   பொறுப்­புக்­கூறல் மற்றும்  நல்­லி­ணக்க விட­யத்தில்  மிகவும்  தாம­த­மாக செயற்­ப­டு­கின்­ற­தாக  நேற்று  முன்­தினம்   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசேன்   கடும் அதி­ருப்­தியை  வெ ளியிட்ட நிலையில் இந்த  சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளமை  விசேட அம்­ச­மாகும். 
இதன்­போது    பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்க விட­யத்தில் அர­சாங்கம்  முன்­னெ­டுக்கும் வேலைத்­திட்­டங்கள் குறித்து   அல் ஹுசே­னுக்கு  ஜனா­தி­பதி  மைத்­திரி  விளக்­க­ம­ளிக்­க­வுள்ளார். அத்­துடன்  காணாமல் போனோர்   தொடர்­பாக ஆராய்­வ­தற்­கான    அலு­வ­லகம் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறித்தும்   புதிய  அர­சி­ய­ல­மைப்பை  உரு­வாக்க   அர­சாங்கம்  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­கின்­றமை  தொடர்­பா­கவும் ஜனா­தி­பதி    விளக்­கிக்­கூ­ற­வுள்ளார். 
எனினும்   2015  ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை  அமுல்­ப­டுத்­து­வதில் அர­சாங்கம்   தாம­த­மாக  செயற்­ப­டு­வ­தாக இந்த சந்­திப்­பின்­போது  செய்ட் அல் ஹுசேன்   அதி­ருப்­தியை  வெ ளியி­டலாம் என   எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
ஆனால்  பொறுப்­புக்­கூறல் நல்­லி­ணக்க செயற்­பா­டுகள் மற்றும்   2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை  அமு­லாக்­குதல்   தொடர்பில்   அர­சாங்கம் எதிர்­கொள்ளும்  சவால்கள் குறித்தும்   இன­வாத சக்­தி­களின்   இடை­யூ­றுகள்   தொடர்­பா­கவும்  ஜனா­தி­பதி  இதன்­போது   ஐக்­கிய நாடுகள்  மனித உரிமை ஆணை­யாளர்  செய்ட் அல் ஹுசே­னுக்கு   எடுத்­து­ரைப்பார் என்றும்  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.   
இதே­வேளை  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ளும் இந்­திய பிர­தமர்  நரேந்­திர மோடி­யையும்  ஜனா­தி­பதி  சந்­தித்து  இரு­த­ரப்பு  பேச்­சு­வார்த்­தையை  நடத்­த­வுள்ளார்.    ஐக்­கிய நாடுகள் பொதுச் சபை வளா­கத்தில் இந்த பிரத்­தி­யேக சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. 
இதன்­போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான   உறவை மேலும் கட்­டி­யெ­ழுப்­புதல்  குறித்தும்  இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான  உறவை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு  செல்­வது    தொடர்­பா­கவும் இரண்டு நாடு­க­ளி­னதும்  தலை­வர்கள் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். 
மேலும்  இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்­டு­வரும்  புதிய அர­சி­ய­ல­மைப்பு   அதில்  தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு என்­பன  தொடர்­பா­கவும்  விரி­வாக  பேசப்­ப­ட­வுள்­ளது.   மேலும்  எட்கா உடன்­ப­டிக்கை விவ­காரம்     மத்­தள  விமான நிலைய   அபி­வி­ருத்தி இணக்­கப்­பா­டுகள் குறித்தும்  இதன்­போது இரண்டு நாடு­க­ளி­னதும் தலை­வர்­க­ளினால்  கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்ள இரண்டு  தலை­வர்­க­ளி­னதும் சந்­திப்பு  மிகவும் முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.  
இது இவ்­வாறு இருக்க ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்­டத்தில்  கலந்­து­கொள்ளும்    சீன ஜனா­தி­பதி ஜின்பின் மற்றும் ஜப்பான் பிர­தமர் சின்­சிரோ அபே  ஆகி­யோ­ரையும்  ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால சிறி­சேன  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளார். 
சீன ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்­பின்­போது  இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான வர்த்­தக உறவு மற்றும்  ஏனைய   தொடர்­புகள் குறித்தும்  பேசப்­ப­ட­வுள்­ளது.  துறை­முக நகர்  அபி­வி­ருத்தி திட்டம் மற்றும்   சீனா­வினால் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­படும் அபி்­வி­ருத்தி திட்­டங்கள் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்தும்   இலங்கை சீன  தலை­வர்கள்  கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர். 
 அண்­மையில்  இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் கைச்­சாத்­தி­டப்­பட்ட   அம்­பாந்­தோட்டை  துறை­முக உடன்­ப­டிக்கை குறித்தும்  பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. 
அத்­துடன்  ஜப்பான்  நாட்டின் பிர­த­ம­ருடன்   திரு­மலை துறை­மு­கத்தை   அபி­வி­ருத்தி செய்­வது  குறித்து   ஜனா­தி­பதி  பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டலாம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  அத்­துடன் இலங்­கைக்கும்  ஜப்­பா­னுக்கும் இடை­யி­லான  வர்த்­தக பொரு­ளா­தார உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வது  குறித்தும் இதன்­போது பேச்­சு­வார்த்தை  நடத்­தப்­படும். 
ஐக்­கிய நாடுகள்  செய­லாளர்  அன்­டோ­னியோ கட்­ர­ஸு­டனும் ஜனா­தி­பதி   மைத்­தி­ரி­பால சிறி­சேன  பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ள­துடன்  ஐக்­கிய நாடுகள் சபை­யுடன்   இணைந்து பய­ணிப்­பது குறித்து  ஆரா­ய­வுள்ளார். அத்­துடன்  இலங்­கையில்  ஐக்­கிய நாடுகள் சபை முன்­னெ­டுக்கும் அபி­வி­ருத்தி  உதவி  திட்­டங்கள்   தொடர்­பா­கவும் பேசப்­ப­ட­வுள்­ளது. 
இதே­வேளை  ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும்  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   எதிர்வரும் 19 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை    பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார். 
இந்த உரையின்போது  அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும்  வேலைத்திட்டங்கள்  போன்றவை தொடர்பாக  உலகநாடுகளின் தலைவர்களுக்கு  விளக்கமளிக்கவிருக்கிறார்.  
ஜனாதிபதியுடன்  வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன  உள்ளிட்ட அமைச்சர்கள்  சிலரும்   ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள   நியுயோர்க் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget