Ads (728x90)

மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளுடன் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து கப்பல்களில் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

பின்னர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 8 பேரையும் கைது செய்த அவர்கள்,இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகின்றனர். இதனை அடுத்து மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நேரில் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget