Ads (728x90)

மாணவி வித்­தி­யாவை தாம் பாலியல் பலாத்­காரம் செய்து கொலை செய்­ய­வில்லை எனவும் அவரைக் கொன்­றவர் வேறு ஒரு­வரே எனவும் தெரி­வித்து, மாணவி வித்­தியா  படு­கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­க­ளாக காணப்­பட்டு மரண தண்­டனை அளிக்­கப்­பட்ட எழு­வரும் மேன்­மு­றை­யீடு செய்­ய­வுள்­ளனர்.

அடுத்­து­வரும் 12 நாட்­க­ளுக்குள் இந்த மேன் முறை­யீடு .மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல்  செய்­யப்­ப­ட­வுள்­ளது. வித்­தியா படு­கொலை குற்­றத்தை புரிந்­த­வர்கள் வேறு யாரோ என தெரி­வித்த குற்­ற­வா­ளிகள் சார்பில் ஆஜ­ராகும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மஹிந்த ஜய­வர்­தன, இது தொடர்­பி­லான மேன் முறை­யீட்டை 14 நாட்கள் கால அவ­கா­சத்­துக்குள் மிக விரைவில் தாக்கல்  செய்­வ­தாக தெரி­வித்தார்.

தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்ள குற்­ற­வா­ளிகள் வித்­தியா கொலை­யுடன் தொடர்­பு­ப­ட­வில்லை என தெரி­விக்கும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி மஹிந்த ஜய­வர்­தன, குறித்த கொலை தொடர்பில் ஊட­கங்கள் அறிக்கை இட்ட விதம் தொடர்­பிலும் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

இத­னி­டையே வித்­தியா  கொலை தொடர்பில் மரண தண்­டனை அளிக்­கப்­பட்­ட­வர்கள் தாமாக மேன் முறை­யீடு செய்­யா­வி­டத்தும், 14 நாட்­க­ளுக்குள் சிறைச்­சாலை ஊடாக அவர்கள் சார்பில் மேன் முறை­யீடு செய்­யப்­படும் என சிறைச்­சா­லைகள்  ஊடகப் பேச்­சாளர் துஷார உபுல்­தெ­னிய சுட்­டிக்­காட்­டினார்.

மரண தண்­டனை விதிக்­கப்­படும் எந்­த­வொரு கைதி தொடர்­பிலும் சிறைச்­சாலை இந்த நடை­மு­றை­யையே பின்­பற்­று­வ­தா­கவும், அதன்­ப­டியே வித்­தியா கொலை தொடர்­பிலும் அவர்கள் தனிப்பட்ட ரீதியில் மேன்முறையீடு செய்யாதவிடத்து, சிறைச்சாலை ஊடாக மேன்முறையீடு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget