
அதில் 333 கைதிகளின் மரண தண்டனை தீர்ப்பானது மேன் முறையீடு ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மரண தண்டனைக் கைதிகள் அனைவரும் நாடளாவிய ரீதியில் 5 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய கேசரியிடம் தெரிவித்தார்.
தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைத்து மரண தண்டனை கைதிகளும் வெலிக்கடை, மஹர, போகம்பரை, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இவ்வாறு 1166 மரண தண்டனை கைதிகள் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 333 பேரின் மேன் முறையீட்டு விசாரணைகள் நிறைவடைந்து அவர்களது மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 826 பேரின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான மேன் முறையீட்டு விசாரணைகள் நிலுவையில் உள்ளன. நேற்று முன் தினம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 7 பேரும் இதுவரை மேன் முறையீடு செய்யவில்லை.
மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள 1166 பேரில் 37 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந் நிலையில் நேற்று முன் தினம் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 7 பேரும் தற்போது போகம்பறை சிரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும், அவர்களை மூன்று சிறைச்சாலைகளில் அடைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உள்ளக தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது. அதன்படி அந்த 7 பேரும் போகம்பறை, வெலிக்கடை மற்றும் மஹர ஆகிய சிறைச்சாலைகளில் அடைக்கப்படவுள்ளனர்.
Post a Comment