Ads (728x90)

இங்­குள்ள சிலர் பத்­தி­ரி­கை­க­ளில் தமது பெயர்­கள் வர­வேண்­டும் என்­ப­தற்­காக ஒன்­றுமே தெரி­யா­மல் எமக்கு அ,ஆ, படிப்­பிப்­ப­து­போல கருத்­துக்­க­ளைக் கூறி­வ­ரு­கின்­ற­னர். இளை­யோர் சில­ரும் இவ்­வாறு நடந்­து­கொள்­கின்­ற­னர்.
இது­தான் எமது அர­சி­ய­லில் உள்ள பிரச்­சினை. நாம் கூட்­டாட்சி­யைக் கைவிட்­டு­ விட்­டோம், வடக்கு– – கிழக்கு இணைப்பை கைவிட்­டு­விட்­டோம், தலை­மை­யைத் தூக்கி எறிய வேண்­டும் என்­றும் ஒன்­றுமே விளங்­கா­மல் சிலர் கொக்­க­ரிக்­கின்­ற­னர்” இவ்­வாறு இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை.சோ.சோனா­தி­ராசா சீற்­றத்­து­டன் தெரி­வித்­தார்.

கோப்­பாய் கோமான் வன்­னி­ய­சிங்­கத்­தின் 57ஆவது நினை­வுப் பேருரை கோப்­பாய் வடக்கு சித்­தி­ர­வே­லா­யு­தர் கோவில் மண்­ட­பத்­தில் நேற்று இடம்­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யில் அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இளை­யோ­ருக்கு சில விளக்­கங்­களை நாம் வழங்க வேண்­டிய தேவை உள்­ளது. அர­சி­யல் என்­பது எமது மண்­ணில் எவ்­வாறு அர்ப்­ப­ணிப்­பு­டன் பய­ணிக்­கின்­றது என்­ப­தற்கு தமிழ் அர­சுக் கட்சி சிறந்த உத­ாரண­மாக இருக்­கும்.
எமது மக்­க­ளின் விடு­த­லைக்­கா­கவே கட்சி ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்து பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதில் வன்­னி­ய­சிங்­கம் முக்­கிய பங்கு வகிக்­கின்­றார். தந்தை செல்வா நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­ற­போ­தி­லும் வன்­னி­ய­சிங்­கம் கோப்­பாய் தொகு­தி­யில் வெற்றி பெற்­றி­ருந்­தார்.

முன்­னைய காலத்­தில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் கூட்­டங்­க­ளில் சிலர் விச­மத்­த­ன­மான குழப்­பங்­களை செய்ய முயற்­சித்­த­ துண்டு. அந்­தச் செயற்­பா­டு­கள் இப்­போ­தும் அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றன. அது ஒரு பிரச்­சி­னை­யல்ல.
இலங்­கை­யில் தனிச் சிங்­க­ளச் சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட்ட போது கொழும்­பில் நாடா­ளு­மன்ற வளா­கத்­துக்கு முன்­பா­க­வும் காலி முகத்­தி­ட­லி­லும் குருதி சிந்­திப் போராட்­டம் செய்­த­வர்­கள் தமிழ் அர­சுக் கட்­சி­க்காரர்­கள் என்­பதை மக்­கள் அறி­வார்­கள்.

மிகக்­கு­றைந்த எண்­ணிக்­கையைக் கொண்ட ஒரே தேசிய இனம் ஈழத்­த­மி­ழர்­கள்­தான். அவர்­க­ளில் ஏரா­ள­மா­னோர் சுய நிர்­ணய உரி­மை­யு­டன் வாழ வேண்­டும் என்­ப­தற்­காக அகிம்சைப் போராட்­டங்­க­ளை­யும் ஆயு­தப் போராட்­டங்­க­ளை­யும் நடத்தி தமது இன்­னு­யிர்­க­ளைத் தியா­கம் செய்­துள்­ள­னர்.

வன்­னி­ய­சிங்­கம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­போது குருதி சிந்­திய நிலை­யில் தனது உள்­ளா­டை­யு­டன் நாடா­ளு­மன்­றில் உரை­யாற்­றி­னார். காலி முகத்­தி­ட­லில் அவர்­கள் கடு­மை­யாகத் தாக்­கப்­பட்­ட­னர். தமி­ழர்­க­ளின் விடு­த­லைப் போராட்­டத்­தில் எமது உச்­சப் பலம் விடு­த­லைப்­பு­லி­ கள் ஆயு­தம் ஏந்­திப்­போ­ரா­டிய காலத்­தி­லேயே இருந்­தது. அதனை யாரா­லும் மறுக்க முடி­யாது. நாம் அதில் நேர­டி­யா­கப் பங்கு பற்­றா­விட்­டா­லும் நாம் அவர்­க­ளு­டன் புரிந்­து­ணர்­வு­டன் பய­ணித்­தோம்.

தற்­போது நாம் பன்­னாட்­டின் உத­வி­யு­டன் பய­ணித்து வரு­கின்­றோம். தமி­ழர்­க­ளுக்­கான சுய உரிமை விட­யத்­தில் இந்த அர­சும் ஏமாற்­றும் வகை­யில் செயற்­பட்­டால் வடக்கு – கிழக்கு ரீதி­யாக இந்த நாட்­டில் கூட்டு அரசு மட்­டு­மல்ல எந்த ஆட்­சி­யும் நடை­பெ­றாத நிலமை ஏற்­ப­டும். அந்­த­வே­ளை­யில் ஐ.நாவும் வெளி­நா­டு­க­ளும் எமக்­குப் பக்­க­ப­ல­மாக இருக்க வேண்­டும் என்று கோரி­யுள்­ளோம்.
தமி­ழர்­க­ளுக்­குக் கிடைத்­துள்ள அர­சி­யல் சந்­தர்ப்­பத்தை மூழ்­க­டிக்க சிலர் முயற்­சித்து வரு­கின்­ற­னர். எமது கட்­சி­யின் கொள்கை மற்­றும் கடந்த மாகாண சபைத் தேர்­த­லின்­போது முன்­வைத்த அறிக்­கை­யில் கூட்­டாட்சி பற்றி பேசி­யுள்­ளோம் என்று கூறி சிங்­கள தீவி­ர­வா­தி­கள் எம்­மீது வழக்கு தாக்­கல் செய்­த­னர். ஆனால் எமக்கு நீதி­மன்­றில் நீதி கிடைத்­து­விட்­டது.

தற்­போ­தைய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் தென்­னி­லங்­கைத் தலை­வர்­கள் கூட்­டாட்சியை ஏற்­க­மாட்­டார்­கள் என்று கூறி­வ­ரும் நிலை­யில் நாமும் ஒற்­றை­யாட்­சியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­தில் வைராக்­கி­ய­மாக உள்­ளோம். இந்த நாட்­டில் உள்ள ஒன்­பது முத­ல­மைச்­சர்­க­ளும் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட வேண்­டும் என்­ப­தில் திட­மாக இருக்­கின்­ற­னர். ஆகவே நாம் பெற­வி­ருக்­கும் அதி­கா­ரத்­தைக் கொழும்பு அரசு மீளப்­பெ­ற­மு­டி­யாத வகை­யான ஏற்­பா­டு­கள் உள்­ளன.

சில சிங்­கள தீவி­ர­வா­தி­கள் கூட்­டாட்சியைப் பிரி­வி­னை­வா­தம் என்று கூறி வரு­கின்­ற­னர். எதிர்­வ­ரும் 21 ஆம் திகதி புதிய அர­ச­மைப்­பின் இடைக்­கால அறிக்கை வரும்­போது சொல்­லப்­ப­டும் வார்த்­தை­யில் அனை­வ­ரும் அதனை விளங்­கிக்­கொள்­வர். வடக்கு -– கிழக்கு இணைப்­புத் தொடர்­பில் தமிழ் முஸ்­லிம் மக்­கள் ஒரு புரிந்­து­ ணர்­வுக்கு வந்­துள்­ள­னர். முழு­மை­யாக அதனை இணைக்க நாம் அனைத்து முயற்­சி ­க­ளை­ யும் எடுத்து வரு­கின்­றோம்.
இந்த நாட்­டில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட வேண்­டும். பகி­ரப்­பட்ட அதி­கா­ரங்­கள் கொழும்பு அர­சால் மீளப்­பெ­ற­மு­டி­யாத ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட வேண்­டும் என்­ப­தில் இந்த நாட்­டின் அனைத்து தரப்­பு­க­ளும் உறு­தி­யாக உள்­ளது.

வடக்கு – கிழக்கு இணைப்பு இடம்­பெ­ற­வேண்­டும் என்­பதை, தமிழ் அர­சுக் கட்­சிக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட வழக்­கின் தீர்ப்பு எடுத்­துக்­காட்­டு­கின்­றது – – என்­றார். இந்த நிகழ்­வில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே. சிவ­ஞா­னம், மாகாண சபை உறுப்­பி­னர்­கள் உள்­ளிட்ட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget