ஹெலிகாப்டரில் இருந்து போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்தது. அரபிக் கடலில் பாகிஸ்தான் கடற்படை நேற்று ஏவுகணை சோதனை நடத்தியது. ஹெலிகாப்டரில் இருந்து கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள் வீசப்பட்டன.அந்த ஏவுகணைகள் கடலில் அமைக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியது. இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் முகமது ஜகாலியா கூறுகையில், ‘‘இந்த வெற்றிகர சோதனை பாகிஸ்தான் கடற்படையின் திறமையையும், தயார் நிலையையும் காட்டுகிறது’’ என்றார்.
Post a Comment