Ads (728x90)

பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளை­யாட இலங்­கையின் 11 வீரர்கள் ஏலம் எடுக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஐ.பி.எல். தொடர் போல் பங்­க­ளா­தே­ஷிலும் பிரீ­மியர் லீக் கிரிக்கெட் தொடர் நடை­பெற்­று­வ­ரு­கி­றது.

இதில் இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார் சங்­கக்­கார தலை­மை­யி­லான டாக்கா டைனமைட்ஸ் அணி கடந்த முறை சம்­பியன் கிண்­ணத்தை வென்­றி­ருந்­தது.

இந்­நி­லையில் நடப்பு ஆண்­டுக்­கான பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் தொடரில் மேலும் 11 வீரர்­களை இணைத்துக் கொண்­டுள்­ளனர்.

அதன்­படி ரங்பூர் ரைடர்ஸ் அணியில் திஸர பெரேரா, குசல் ஜனித் பெரேரா ஆகியோர் இடம்­பெற்­றுள்­ளனர். குமார் சங்­கக்­கார டாக்கா டைனமைட்ஸ் அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஜீவன் மெண்டிஸ் மற்றும் டில்ஷான் முன­வீ­ரவை சிட்­டகொங் வைக்கிங்ஸ் அணி ஏல­மெ­டுத்­துள்­ளது. அஞ்­சலோ மெத்­தியூஸ் கொமி­லியா விக்­டோ­ரியன்ஸ் அணிக்­காக விளை­யா­டு­கிறார். சீக்­குகே பிர­சன்ன,

ஷெஹான் ஜய­சூ­ரிய ஆகி யோர் குல்னா டைடன்ஸ் அணிக்கும், தசுன் சானக்க, வனிந்து ஹச­ரங்க, சது­ரங்க டி சில்வா ஆகியோர் சில்ஹிட் சிக்ஸர்ஸ் அணிக்கும் ஆடு­கின்­றனர்.

பங்­க­ளாதேஷ் பிரீ­மியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் மொத்தம் 26 இலங்கை வீரர்கள் இடம்­பெற்­றி­ருந்­தனர். இதில் 11 பேர் ஏல­மெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர்.

'ஏ' முதல் 'எவ்' வரை­யி­லான தர­நி­லை­களில் வீரர்கள் ஏல­மெ­டுக்­கப்­பட்­டுள்­ளனர். 10 ஆயிரம் அமெ­ரிக்க டொலர்கள் முதல் 70 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget