Ads (728x90)

நல்­லூர் பின்­வீ­தி­யில் அமைந்­துள்ள தியாக தீபம் திலீ­ப­னின் நினை­வுத் தூபி­யில் நேற்று நினை­வேந்­தல் நிகழ்வு நடை­பெற்ற சம­நே­ரத்­தில், தென்­னி­லங்கைக் காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வும் நடை­பெற்­றது.
திலீ­ப­னின் நினை­வேந்­த­ லைக் குழப்­பும் வகை­யில் நடை­பெற்ற அந்த நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்­டும் பங்­கேற்­றி­ருந்­தார்.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக அகிம்சை ரீதி­யில் போராடி வீரச்­சா­வ­டைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீ­ப­னின் 30ஆவது ஆண்டு நினை­வு­நாள் தமி­ழர் தாயக மண்­ணில் நேற்று உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.
நல்­லூ­ரில் திலீ­ப­னின் நினை­வுத் தூபி அமைந்­துள்ள இடத்­தி­லும் நினைவு நாள் நிகழ்வு நடத்­தப்­பட்­டது.

இந்த நிகழ்வு நடை­பெற்­ற­போது, நினை­வுத் தூபிக்கு எதி­ராக உள்ள பிர­தே­சத்­தில் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்வு இடம்­பெற்­றது. மிகப் பெரிய சத்­த­து­டன் அந்த நிகழ்வு நடை­பெற்­றது.

தியாக தீபத்­தின் நினை­வு­நாள் உரை ஆரம்­பித்­த­போது, காப்­பு­றுதி நிறு­வ­னம் இலங்­கை­யின் தேசிய கீதத்­தைப் பெரும் சத்­தத்­து­டன் ஒலிக்­க­விட்­டுள்­ளது.
திலீ­ப­னின் நினைவு நாளைக் குழப்­பும் வகை­யில் அந்த நிறு­வ­னத்­தின் செயற்­பாடு அமைந்­தி­ருந்­தாக, நினை­வேந்­த­லில் கலந்து கொண்ட பல­ரும் சுட்­டிக்­காட்­டி­னர்.

காப்­பு­றுதி நிறு­வ­னத்­தின் நிகழ்­வில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் இ.ஆனோல்ட்டே கலந்து கொண்­டி­ருந்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget