
இந்தப் படத்தின் கதையை நானும், மிலனும் இணைந்து எழுதியிருக்கிறோம். மிலிந்தும் நானும் மணிரத்னம் சாரிடம் ஒன்றாக உதவி இயக்குனர்களாக சேர்ந்தோம். அன்றிலிருந்து இருவரும் இணைந்த பணியாற்ற விரும்பினோம். அது இப்போது நடந்திருக்கிறது. இந்த கதையை 4 வருடங்களாக உழைத்து உருவாக்கி உள்ளோம். இது ஹாரர் படம். இமாசல பிரதேசத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மைனஸ் 10 டிகிரி குளிரில் ஒரு மாதம் வரை இமாச்சல பிரதேசத்தில் தங்கியிருந்து படம் பிடித்துள்ளோம்.
இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் பயமுறுத்தும். கண்டிப்பாக அவர்களால் தனியாக இந்தப் படத்தை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு ஹாரர் காட்சிகள் இடம்பெறுகிறது. ரசிகர்களை பயமுறுத்தாமல் விடக்கூடாது என்ற வைராக்கியம் கொண்டு காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. ஒரு காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்தவில்லை. ஆனால் கதையும், காட்சி அமைப்பும் பயமுறுத்தும், ஹாலிவுட் படங்களின் தரத்தில் உருவாகி உள்ளது.
ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணரும் அவரது மனைவியும் ஓய்வுக்காக ஒரு பனிமலை பிரதேசத்துக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களின் பக்கத்து வீட்டுக்கு ஜெனி என்ற பெண்ணுடன் பெற்றோர்கள் குடிவருகிறார்கள். அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை அந்த பிரச்சினை இவர்களை எப்படி பாதிக்கிறது என்பது தான் கதை.
இதுவரை பேயை நம்பாதவர்களை நம்ப வைக்கும். நம்புகிறவர்களை பேய் இல்லையோ என்று நினைக்க வைக்கும் அப்படியான ஒரு திரைக்கதை. என்றார் சித்தார்த்.
Post a Comment