
பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பிரபல கதாநாயகனும், அவரின் மகனும் இணைந்து நடிக்கும் படமாக இது உருவாகிறது. கார்த்திக் அவரின் மகனுடன் இணைந்து நடிக்கும் படி பலர் கேட்டும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு நல்ல கதை இருந்தால் மட்டுமே இணைந்து நடிப்பதாக இருந்தவர் இயக்குனர் திரு கதையை சொல்லியதுமே நடிக்க சம்மதம் தெரிவித்தார்.
கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மேலும் பல பிரபல நடிகர்களும் நடிக்க உள்ளனர். படத்தின் தலைப்பு முடிவு செய்யப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களும் தெரிவிக்கப்படும்.
கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் ஒட்டுமொத்தமாக தேதிகளை கொடுத்துள்ளனர். எனவே ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க இயக்குனர் மற்றும் தயாரிப்பு குழு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.
Post a Comment