Ads (728x90)

“இடைக்­கால அறிக்­கை­யின் சிங்­க­ளப் பிர­தி­யில் ஒற்­றை­யாட்சி, பௌத்த மதத்­துக்­கான முன்­னுரிமை என்ற அனைத்­துமே தெளி­வா­கக் குறிப்­பிடப்­பட்டுள்­ளது. ஆகவே எந்­தப் பிரச்­சி­னை­க­ளும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இத­னைத் தமி­ழர் தரப்­பும் ஏற்­றுக் கொண்­டுள்­ளது”

அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்­கர்­க­ளைச் சந்­தித்த பின்­னர் ஊட­கங்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யில் அமைச்­சர் லக்ஸ்­மன் கிரி­யெல்ல இவ்­வாறு தெரி­வித்­தார். புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை தொடர்­பில் பௌத்த மக்­க­ளின் உயர் பீடங்­க­ளான அஸ்­கி­ரிய மற்­றும் மல்­வத்து இரண்­டும் இரு­வேறு நிலைப்­பா­டு­களை இது­வரை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன.

மல்­வத்து பீடத்­தி­னர், நாட்­டைப் பிரிக்­காத அதி­கா­ரப் பகிர்­வுக்கு இணக்­க­மான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். அஸ்­கி­ரிய பீடம் இதற்கு எதி­ரான நிலைப்­பாட் டில் உள்­ளது. ஒற்­றை­யாட்சி தொடர வேண்­டும் என்­பது உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­க­ளில் அது இறுக்­க­மான நிலைப்­பாட்­டில் உள்­ளது.

இலங்­கை­யின் முக்­கிய பௌத்த பீடங்கள் இணைந்து இடைக்­கால அறிக்கை தொடர்­பான தமது நிலைப்­பா­டு­களை எதிர்­வ­ரும் வியா­ழக் கி­ழமை வெளி­யி­ட­வுள்­ள­தா­கத் தெரி­வித்­துள்­ளன. இதற்கு முன்­ன­தாக, அஸ்­கி­ரிய பீடத்­தி­ன­ரைச் சமா­ளித்து இடைக்­கால அறிக்­கை­யு­டன் இணங்­கச் செய்­யும் முயற்­சி­களை முன்­னெ­டுக்க அரசு திட்­ட­மிட்­டி­ருந்­தது.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, சபை முதல்­வ­ரும் அமைச்­ச­ரு­மான லக்ஸ்­மன் கிரி­யெல்ல அஸ்­கி­ரிய பீடத்­தி­னரை நேற்­றுச் சந்­தித்­துப் பேச்சு நடத்­தி­னார். பேச்­சின் முடி­வில் ஊட­கங்­க­ளுக்கு அவர் கருத்­துத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்பு முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நாடா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் சகல கட்­சி­க­ளி­ன­தும் யோச­னை­களே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. பரந்த விவா­தத்தை நாம் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­னெ­டுப்­போம். சகல கட்­சி­க­ளி­ன­தும் ஆத­ர­வு­டன் மாத்­தி­ரமே இதனை தடை­க­ளின்றி முன்­னெ­டுக்க முடி­யும். நாடா­ளு­மன்­றத்­தில் சகல தரப்­பி­ன­ரும் ஆத­ரித்­தால் மட்­டுமே மக்­க­ளின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பை­யும் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

இதற்கு முன்­னர் அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளில் தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளின் ஒத்­து­ழைப்பு இருக்­க­வில்லை. இப்­போது அவ்­வாறு அல்­லாது தமி­ழர் தரப்­பி­னர் முழு­மை­யான ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி புதிய அர­ச­மைப்பை ஆத­ரிக்­கும் நிலமை காணப்­ப­டு­கின்­றது.

பௌத்­தம் தொடர்­பி­லும், ஒற்­றை­யாட்சி என்ற விட­யத்­தி­லும் மாற்­றுச் சிந்­த­னையை முன்­னெ­டுக்க வேண்­டிய எந்­தத் தேவை­யும் இல்லை. இவை தொடர்­பில் விவா­திக்­கவே தேவை­யில்லை. போரின் பின்­னர் இந்த நாடு புதிய மாற்­றம் ஒன்றை ஏற்­ப­டுத்­திக் கொள்­ள­வில்லை. புதிய ஆரம்­பம் ஒன்று அவ­சி­யம் என்று மக்­கள் எதிர்­பார்த்து செயற்­ப­டும் நிலை­யில் இது­வ­ரை­யில் அவ்­வா­றான ஒரு வாய்ப்­புக் கிடைக்­க­வில்லை. இனங்­க­ளுக்கு இடை­யே­யான அவ­நம்­பிக்கை இன்­றும் உள்­ளது. தமி­ழர் சிங்­க­ள­வரை நம்­பு­வ­தில்லை, சிங்­க­ள­வர் முஸ்­லிம்­களை நம்­பு­வ­தில்லை என்று இனங்­க­ளுக்கு இடை­யி­லான குழப்­பங்­கள் இன்­றும் தொடர்­கின்­றது.

சகல மக்­க­ளின் அர­சி­யல் பிர­தி­நி­தி­க­ளும் சகல கட்­சி­க­ளும் இணைந்து நாட்­டுக்கு தேவை­யான வகை­யில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்க முடி­யு­மா­யின் அதுவே நல்­லி­ணக்­கத்தை வெற்­றி­கொள்­ளும் முக்­கிய வழி­யா­கும். புதிய ஆரம்­பம் ஒன்றை உரு­வாக்க புதிய அர­ச­மைப்பு அவ­சி­ய­மா­கும்.

மகா­நா­யக தேரர்­களை நிரா­க­ரித்து எந்­தச் செயற்­பாட்­டை­யும் முன்­னெ­டுக்க முடி­யாது. சிங்­கள மொழி­யில் ஒரு வகை­யி­லும் ஆங்­கி­லத்­தில் வேறு வித­மா­கும் அர­ச­மைப்பு உள்­ள­தா­கக் கூறு­கின்­ற­னர். நீதி­மன்­றத்­தில் சிங்­கள பிர­தி­யி­னையே அங்­கீ­க­ரிப்­பார்­கள். சிங்­க­ளப் பிர­தி­யில் ஒற்­றை­யாட்சி, பௌத்த முன்­னு­ரிமை என்ற அனைத்­துமே தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எந்­தப் பிரச்­சி­னை­க­ளும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்ற நிலை­யில் சிலர் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரும் நிலை­யில் அதனை நாம் பெரி­து­ப­டுத்த வேண்­டிய அவ­சி­யம் இல்லை – என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget