
2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் அடுத்த ஆண்டின் மொத்த வருமானம் 2175 பில்லியன் ரூபாவாகவும் செலவீனம் 3982 பில்லியன் ரூபாவாக மதிப்பீடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் அடுத்த மாதம் 9 ஆம் திகதி நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் முதலாம் வாசிப்பாக இன்று திங்கட்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நிதி மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். 2018 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தின்படி அடுத்த ஆண்டுக்கான மொத்த வருமானமாக 2175 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் செலவீனமாக 3982 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் பிரகாரம் பாதுகாப்பு துறைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment