வீதிகளில் குப்பை கொட்டும் விவகாரத்தில் இதுவரை 348 பேரிடம் தண்டம் அறவிடப்பட்டதாக யாழ் மாநகர ஆணையாளர் பொ.வாகீ சன் தெரிவித்தார்.யாழ். மாநகர சபைப் பிரதேசத்தில் வீதிகளில் குப்பை போடுபவர்களுக்கு எதிராக சம்பவ இடத்திலேயே தண்டம் விதிக்கும் நடைமுறை இருந்துவருகின்றது.
இதற்கமைய இந்த வருடத்தில் இதுவரை 348 பேருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இதில் பாரதூரமானவை என இனம் காணப்படும் சம்பவங்கள் நீதிமன்றில் பாரப்படுத்தப்படுகின்றன.
அந்தவகையில் இதுவரைக்கும் 13 ேபருக்கு எதிரான வழக்குகளை நாம் நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளோம் – எனத் தெரிவித்தார்.
Post a Comment